அண்மைய செய்திகள்

recent
-

நான்கு பிள்ளைகள் இருந்தும், நாய் படுக்கும் படுக்கையில் தாய் படுத்திருந்த பரிதாபம்!


நாய் படுக்கும் படுக்கையில் சில நாட்கள் படுத்திருந்த தன்னை, தன்னுடைய நான்கு பிள்ளைகளும் தவிக்க விட்டுவிட்டனர் என்று, 88 வயதான தாயொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பாணந்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த வயோதிபத் தாயே இவ்வாறு கலேவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


தனக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர் என்றும், அவர்களில் வங்கியில் கடமையாற்றும் மகன், தன்னைத் தவிக்கவிட்டு விட்டதாகவும் அத்தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணிக்கும் பஸ்ஸில் தன்னை, நேற்று திங்கட்கிழமை, அந்த மகன் ஏற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஏனைய மகன்மார் இருவரும் பொலிஸ் சேவையில் உள்ளனர் என்றும். மகள், ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார் என்றும் தனது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்றில் தடுத்து வைத்திருந்ததாக, நாய் படுத்துறங்கும் படுக்கையில் சில நாட்கள் படுத்திருந்ததாகவும் அத்தாய், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.





நான்கு பிள்ளைகள் இருந்தும், நாய் படுக்கும் படுக்கையில் தாய் படுத்திருந்த பரிதாபம்! Reviewed by Author on December 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.