அடுத்த வருடம் முதல் இலங்கையில் சேலேன் தொழிற்சாலை!
இலங்கையில் அடுத்த வருடம் முதல் சேலேன் தொழிற்சாலையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்குமான சேலேன் தேவையை இந்த தொழிற்சாலையின் ஊடாக பூர்த்தி செய்துக் கொள்வதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஓளடத உற்பத்தி கூட்டுதாபனத்தின் விற்பனை பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கைக்கு தேவையான அனைத்து மருந்து மற்றும் மருத்துவ பொருட்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து, வெளிநாட்டிற்கு செலுத்தும் பணத்தை சேமிக்கவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வருடம் முதல் இலங்கையில் சேலேன் தொழிற்சாலை!
Reviewed by Author
on
December 06, 2015
Rating:

No comments:
Post a Comment