மன்னாரில் சுகாதார மற்றும் நன்நடத்தை ஊடாக இளைஞர்களை அறிவூட்டும் செயலமர்வு.Photos
மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகளுக்கு சுகாதார மற்றும் நன்நடத்தை ஊடாக அறிவூட்டும் செயலமர்வு இன்று(17) வியாழக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு ஆகியவை இணைந்து குறித்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் குறித்த செயலமர்வு இடம் பெற்றது.
இதன் போது விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மது வரி திணைக்கள பொறுப்பதிகாரி ரி.நந்தகுமார், மன்னார் பொது வைத்தியசாலையின் தொற்றா நோய் வைத்திய அதிகாரி அன்ரன் சிசில்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவலக இளைஞர் சேவை அதிகாரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தொற்றா நோய்,போதைப்பொருள் பாவனை,எச்.ஐ.வி தொற்று ஆகியவை தொடர்பில் இளைஞர் யுவதிகள் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் இளைஞர்களை அறிவூட்டும் செயலமர்வாக இடம் பெற்றது.
குறித்த செயலமர்வில் மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள இளைஞர் கழகங்களைச் சேர்ந்த சுமார் 250ற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(17-12-2015)
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு ஆகியவை இணைந்து குறித்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் குறித்த செயலமர்வு இடம் பெற்றது.
இதன் போது விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், மது வரி திணைக்கள பொறுப்பதிகாரி ரி.நந்தகுமார், மன்னார் பொது வைத்தியசாலையின் தொற்றா நோய் வைத்திய அதிகாரி அன்ரன் சிசில்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை அலுவலக இளைஞர் சேவை அதிகாரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தொற்றா நோய்,போதைப்பொருள் பாவனை,எச்.ஐ.வி தொற்று ஆகியவை தொடர்பில் இளைஞர் யுவதிகள் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் இளைஞர்களை அறிவூட்டும் செயலமர்வாக இடம் பெற்றது.
குறித்த செயலமர்வில் மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள இளைஞர் கழகங்களைச் சேர்ந்த சுமார் 250ற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(17-12-2015)
மன்னாரில் சுகாதார மற்றும் நன்நடத்தை ஊடாக இளைஞர்களை அறிவூட்டும் செயலமர்வு.Photos
Reviewed by NEWMANNAR
on
December 17, 2015
Rating:
No comments:
Post a Comment