மன்னாரின் கல்விக்குரல் அமைப்பினரால் கற்றல் உபகரணங்கள் பேராலயப்பங்குத்தந்தையிடம் கையளிப்பு-2016
மன்னாரின் பேராலயப்பங்குத்தந்தை அவர்கள் மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வேண்டுகோளுக்கினங்க மன்னாரின் கல்விக்குரல் அமைப்பின் இரண்டாவது ஆண்டின் முதலாவது நிகழ்வாக அதன் நிர்வாக இயக்குநரும் சூரியன் பண்பலையின் நிகழ்ச்சி முகாமையாளருமான எஸ்-என்-டிலான் அவர்களின் பணிப்பிற்கினங்க மன்னார் கல்விக்குரலின் தலைவர் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் யூட் பிகிறாடோ அவர்களுடன் மன்னாரின் கல்விக்குரலின் உறுப்பினர்கள் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப்பங்குத்தந்தை பெப்பி சோசை அவர்களிடம் மாணவர்களுக்கான பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணத் தொகுதி கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வானது இன்று 03-12-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணியளவில் பங்குத்தந்தை பணிமணையில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்குத்தந்தையுடன் மாணவர்கள் மன்னாரின் கல்விக்குரல் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்...
மன்னாரின் கல்விக்குரல் அமைப்பினரால் கற்றல் உபகரணங்கள் பேராலயப்பங்குத்தந்தையிடம் கையளிப்பு-2016
Reviewed by Author
on
January 03, 2016
Rating:
Reviewed by Author
on
January 03, 2016
Rating:

No comments:
Post a Comment