அண்மைய செய்திகள்

recent
-

திடீர் மாரடைப்பு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

திடீர் மாரடைப்பு காரணமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் செய்தியை  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பின் காரணமாக உடனடியாக அவர் சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் உடல் நிலை தேறி வருவதாகவும், அவருக்கு தொடர்ச்சியாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலை வைத்தியர்கள் தொரிவித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.



(மன்னார் நிருபர்)

(03-12-2015)

திடீர் மாரடைப்பு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி. Reviewed by NEWMANNAR on January 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.