ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பேர் பல்கலைக்கழகம் செல்ல தகுதி ..!!
2015 உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 447 பேர் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான தகுதியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2014 ல் இதன் தொகை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 483 ஆகும் . இவ்வருட உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 6547 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 5960 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் என பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
2015 ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 55 ஆயிரத்து 191 பேர் விண்ணப்பித்து இருந்ததாகவும் , அதில் இரண்டு இலட்சத்து 10 ஆயிர்த்து 340 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பேர் பல்கலைக்கழகம் செல்ல தகுதி ..!!
Reviewed by Author
on
January 05, 2016
Rating:
Reviewed by Author
on
January 05, 2016
Rating:


No comments:
Post a Comment