மன்னாரில் கொண்டாடப்பட்ட உழவர் விழா!-Photos
மன்னார் மாவட்ட செயலாளரின் ஏற்பாட்டில், உழவர்களை கௌரவிக்கும் விதமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று உழவர் விழா கொண்டாடப்பட்டது.
திட்டமிடல் பணிப்பாளரும், இந்து மன்ற தலைவருமாகிய சிறி பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய கலந்து கொண்டு விழாவிணை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து மூத்த உழவர்கள் இருவர் என்ற அடிப்படையில் பத்துபேருக்கு மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய பொன்னடைபோர்த்தி கௌரவித்தார்.
இதேவேளை குறித்த நிகழ்வில் மன்னார் பிதேச செயலகங்களின் செயலாளர்கள், மன்னார் மாவட்ட செயலக பிரதம கணக்காளர்கள், பதவிநிலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள்கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கொண்டாடப்பட்ட உழவர் விழா!-Photos
Reviewed by NEWMANNAR
on
January 20, 2016
Rating:
No comments:
Post a Comment