அண்மைய செய்திகள்

recent
-

மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடற்படையினரின் உதவியுடன் தலைமன்னார் பழைய பாலத்தடி பிரதான வீதி புனரமைப்பு.(படங்கள் இணைப்பு)

தலைமன்னார் பழைய பாலத்தடி பிரதான வீதி பல வருடங்களாக செப்பனிடப்படாத நிலையில் உள்ளமையினால் கடற்தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

-மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் போக்குவரத்துக்களை துரிதப்படுத்தும் வகையில் தலைமன்னார் பழைய பாலத்தடியில் உள்ள கடற்படையினர் பொது மக்களின் உதவியுடன் குறித்த வீதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை(17) காலை முதல் செப்பனிடும் பணிகளை மேற்கொண்டனர்.

தற்போது தென் பருவகால மீன் பிடி இடம் பெற்று வருகின்றது.

மீனவர்கள் மாற்றுப்பாதையூடாகவே கடலுக்குச் சென்று வருகின்றனர்.

இதனால் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வந்தனர்.

-இந்த நிலையில் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்ட தலைமன்னார் பழைய பாலத்தடியில் உள்ள கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களின் உதவியுடன் குறித்த வீதியை செப்பனிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

-தற்போது குறித்த வீதி போக்கு வரத்து செய்யக்கூடிய வகையில் செப்பனிடப்பட்டுள்ளது.குறித்த வீதியூடாக மீனவர்கள் தாமதம் இன்றி கடலுக்குச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடற்படையினரின் உதவியுடன் தலைமன்னார் பழைய பாலத்தடி பிரதான வீதி புனரமைப்பு.(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on January 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.