அண்மைய செய்திகள்

recent
-

சிங்களவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழர்கள் 10 அடி எடுத்து வைக்க தயார்: விக்னேஸ்வரன்,,,


சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து ஒரு அடி முன்னோக்கி வைப்பார்களேயானால், அதற்காக 10 அடி முன்னோக்கி வைக்க தமிழ் மக்கள் தயார் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நயினாதீவு நாக விகாரைக்கு இன்று சென்றிருந்த முதலமைச்சர், விகாரைகளில் வசித்து வரும் பிக்குமாரின் நலன் விசாரித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை நல்லிணக்கத்திற்காக செய்த சிறிய காரியம் என்றாலும் அது பாராட்டத்தக்கது.

இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் அதிகரித்து கொள்ளவதற்கான சிறந்த பின்புலம் உருவாகியுள்ளது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழர்கள் 10 அடி எடுத்து வைக்க தயார்: விக்னேஸ்வரன்,,, Reviewed by Author on February 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.