அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா சிறுமியை கொலை செய்தது நான் தான் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி

அண்மையில் இலங்கை மக்களை மன ரீதியாக பெரிதும் பாதித்த வவுனியா சிறுமியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட 13 வயது சிறுமி ஹரிஸ்ணவியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் நேற்று கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்ட பாலசிங்கம் ஜனார்தன் எனும் சந்தேக நபர் இந்த கொலையை செய்தது நான் தான் என ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியை எதிர்வரும் 11.03.2016 வரை போலிஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

ஹரிஸ்ணவியின் மரணத்திற்கும் தாய்க்கும் தொடர்பில்லை! வவுனியா பொலிசார்
ஹரிஸ்ணவியின் மரணத்திற்கும் தாய்க்கும் தொடர்பில்லை. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சந்தேகப்படும் வகையில் பல கருத்துக்களைப் பெற்றுள்ளோம் என வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
ஹரிஸ்ணவியின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் நீதிமன்றம் முன்றலில் கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

ஹரிஸ்ணவி கொலை தொடர்பில் நாம் சாதாரண முறைப்படி விசாரணை செய்து சந்தேக நபரை கைது செய்துள்ளோம். அவ்வாறு விசாரணை செய்யப்பட்ட நபரிடம் சந்தேக படும்படியான பல கருத்துக்களை பெற்றே தற்போது கைது செய்துள்ளோம்.

சிலர் தாயை சந்தேகம் என கூறுகின்றனர். எனினும் அவ்வாறு எதுவும் இல்லை. அத்துடன் இச் சிறுமியும் எவரையும் காதலிக்கவும் இல்லை என்பதும் எமக்கு தெரியவந்துள்ளதுடன், களவெடுக்கும் நோக்கோடும் எவரும் அவரின் வீட்டிற்குள் செல்லவும் இல்லை எனவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


வவுனியா சிறுமியை கொலை செய்தது நான் தான் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி Reviewed by NEWMANNAR on February 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.