பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட குடிநீர் தாங்கியை திறந்துவைத்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்...
பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட குடிநீர் தாங்கியை மாணவர்களின் பாவனைக்கு திறந்துவைத்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்...மடு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2015ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து
ரூபாய் 2,50,000-00 நிதி ஒதுக்கப்பட்டு ஏற்க்கனவே கடந்த ஆண்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த நீர்த்தாங்கியை மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு 05-02-2016 அன்று இடம்பெற்றது.
பாடசாலைக்கு விஜயம் செய்த வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் மடு பிரதேச செயலாளர் திரு.எப்.சி.சத்தியசோதி அவர்களும் மடு வலைய கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட குடிநீர் தாங்கியை திறந்துவைத்தார் - அமைச்சர் டெனிஸ்வரன்...
Reviewed by Author
on
February 08, 2016
Rating:
Reviewed by Author
on
February 08, 2016
Rating:





No comments:
Post a Comment