அண்மைய செய்திகள்

recent
-

ஸிகா வைரஸ் தொற்று அபா­யத்­தி­லுள்ள பெண்கள் கருத்­தடை செய்து கொள்­வ­தற்கு ஆத­ர­வாக கருத்து...


ஸிகா வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகும் அபா­யத்­தி­லுள்ள பெண்­க­ளுக்கு கருத்­தடை செய்துகொள்­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்ப டுவதற்கு ஆதரவளிக்கும் கருத்தை பாப்பரசர் முன்­வைத்­துள்ளார்.

கருத்­தடை செய்துகொள்­வது குற்­றச்­செயல் ஒன்­றாக தொடர்ந்து கரு­தப்­ப­டு­கின்ற போதும், கர்ப்­பத்தை தவிர்ப்­பது என்­பது முற்­று­மு­ழு­தாக சாத்­தானின் செயல் ஒன்­றல்ல என அவர் கூறினார்.

மெக்­ஸிக்­கோவிற்கான தனது விஜ­யத்தை பூர்த்தி செய்துகொண்டு தாய்­நாட்­டிற்கு விமா­னத்தில் திரும்­பு­கை­யி­லேயே பாப்­ப­ரசர் இவ்­வாறு கூறினார்.

லத்தீன் அமெ­ரிக்­கா­வெங்கும் பரவி வரும் ஸிகா வைரஸ் தாக்­கத்தால் குழந்­தைகள் மூளை வளர்ச்சி பாதிக்­கப்­பட்டு பிறப்­பது குறித்து பாப்­ப­ர­ச­ரிடம் வின­வப்­பட்ட போதே அவர் மேற்­படி கருத்தை முன்­வைத்­துள்ளார். ரோமன் கத்­தோ­லிக்க மத­மா­னது தற்­போது கருத்­தடை முறை­களைப் பிர­யோ­கிப்­ப­தற்கு தடை விதிக்­கி­றது.

கருக்­க­லைப்­புக்­குள்­ளாக வேண்டிய கர்ப்பத்தைக் கலைப்பதை சாத்தானின் செயலாக கருதி குழப்பமடையக் கூடாது என பாப்பரசர் கூறினார்.

ஸிகா வைரஸ் தொற்று அபா­யத்­தி­லுள்ள பெண்கள் கருத்­தடை செய்து கொள்­வ­தற்கு ஆத­ர­வாக கருத்து... Reviewed by Author on February 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.