ஸிகா வைரஸ் தொற்று அபாயத்திலுள்ள பெண்கள் கருத்தடை செய்து கொள்வதற்கு ஆதரவாக கருத்து...
ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் அபாயத்திலுள்ள பெண்களுக்கு கருத்தடை செய்துகொள்வதற்கு அனுமதி அளிக்கப்ப டுவதற்கு ஆதரவளிக்கும் கருத்தை பாப்பரசர் முன்வைத்துள்ளார்.
கருத்தடை செய்துகொள்வது குற்றச்செயல் ஒன்றாக தொடர்ந்து கருதப்படுகின்ற போதும், கர்ப்பத்தை தவிர்ப்பது என்பது முற்றுமுழுதாக சாத்தானின் செயல் ஒன்றல்ல என அவர் கூறினார்.
மெக்ஸிக்கோவிற்கான தனது விஜயத்தை பூர்த்தி செய்துகொண்டு தாய்நாட்டிற்கு விமானத்தில் திரும்புகையிலேயே பாப்பரசர் இவ்வாறு கூறினார்.
லத்தீன் அமெரிக்காவெங்கும் பரவி வரும் ஸிகா வைரஸ் தாக்கத்தால் குழந்தைகள் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிறப்பது குறித்து பாப்பரசரிடம் வினவப்பட்ட போதே அவர் மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார். ரோமன் கத்தோலிக்க மதமானது தற்போது கருத்தடை முறைகளைப் பிரயோகிப்பதற்கு தடை விதிக்கிறது.
கருக்கலைப்புக்குள்ளாக வேண்டிய கர்ப்பத்தைக் கலைப்பதை சாத்தானின் செயலாக கருதி குழப்பமடையக் கூடாது என பாப்பரசர் கூறினார்.
ஸிகா வைரஸ் தொற்று அபாயத்திலுள்ள பெண்கள் கருத்தடை செய்து கொள்வதற்கு ஆதரவாக கருத்து...
Reviewed by Author
on
February 20, 2016
Rating:

No comments:
Post a Comment