மன்னார் மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை! பிரதி அமைச்சர் ஹாதீப் முகமட் ஹரிஸ்
மன்னார்மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு கழங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் நேரில் வருகை தந்து கலந்துரையாடல் ஒன்றினை இன்று விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ஹாதீப் முகமட் ஹரிஸ் மேற்கொண்டார்.
வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களின் அழைப்பின் பேரில் மன்னார்க்கு வருகை தந்த பிரதி அமைச்சர் கச்சேரி ஜெய்க்கா கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள 151 விளையாட்டுக் கழங்கங்களின் பிரதிநிதிகள் விளையாட்டு அதிகாரிகள் தமது தேவைகளை முன்வைத்னர் பிரதான மான விடையமான மன்னார் மாவட்டத்தின் அமையவுள்ள தேசிய மைதானம் எமில் நகர் கிராம பகுதியில் என்றும் மாற்றாக நானாட்டான் பிரதேசத்தில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடலில் நிலப்பகுதியினை நிபுணர் குழு ஆய்வு செய்த பின்புதான் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது, மன்னார் மாவட்ட பாடசாலைகளில் உள்ள மைதானப் பிரச்சனைகள், உதைப்பந்தாட்ட வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், வெளிநாட்டு விளையாட்டு நிகழ்வுகளுக்கு செல்லும் மாவட்ட மட்ட வீரர்களுக்கான உதவிகளை வழங்குதல், மன்னார் மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் செயற்திட்டத்தை முன்னெடுத்தல் என பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், இ.சாள்ஸ் நிர்மலநாதன், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அல் ஹாஜ் M.B.பாரூக், மற்றும் மாகாண சபை உறுப்பினர் கௌரவ அல் ஹாஜ் ரைஸ் ஆகியோர் உடன் பிரதேச செயலாளர்கள் உதவி தேர்தல்கள் ஆணையாளர் உயர் அதிகாரிகள் விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழங்கங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை! பிரதி அமைச்சர் ஹாதீப் முகமட் ஹரிஸ்
Reviewed by Author
on
February 05, 2016
Rating:
No comments:
Post a Comment