அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசேய்ன் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு வட மாகண முதலமைச்சர் அலுலவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, பிற்பகல் இரண்டு மணியளவில் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசேய்ன், அங்குள்ள விமானப்படை முகாமையும் பார்வையிடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

பின்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கலந்துரையாடவுள்ளார்.

திருகோணமலையிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு Reviewed by NEWMANNAR on February 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.