அண்மைய செய்திகள்

recent
-

உலகம் முழுவதும் வேலையில்லாப் பிரச்சினையை உருவாக்க காத்திருக்கும் ரோபோக்கள்


ரோபோக்களின் தொழில்நுட்பத்தில் செயற்கை அறிவு தொடர்ந்து முன்னேறி வருவதால் அடுத்த 30 ஆண்டுகளில் ஏறக்குறைய உலகின் மொத்த மக்கள்தொகையில் பாதியளவிற்கு வேலையில்லாப் பிரச்சினை உருவாகும் என கணனி வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுபற்றி அமெரிக்காவில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் கணனி விஞ்ஞானியாக பணியாற்றி வரும் மோஷி வார்தி தெரிவித்தவை பின்வருமாறு:-

அடுத்த 30 ஆண்டுகளில் மனிதர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் கணனிகள் மற்றும் ரோபோக்கள் செய்யும் இதனால், உலகப் பொருளாதாரம் 50% அளவுக்கு வேலையில்லாப் பிரச்சினை சந்திக்கும். இயந்திரங்கள் எல்லா வேலைகளையும் செய்தால் மனிதர்கள் என்ன செய்வார்கள்? என்ற இந்த கேள்வியை மனித சமுதாயம் முன்னிறுத்த வேண்டும் என விரும்புகிறேன்.

நாம் இதுவரை உருவாக்கியுள்ள தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு எந்த அளவிற்கு நன்மையை வழங்கியிருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். தொடர்ந்து ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் செயற்கை அறிவு முன்னேற்றம் கண்டுவருவது வருமானத்தில் ஏற்ற இறக்கங்களை உருவாக்கி சமநிலையற்ற தன்மையையும், நடுத்தர வேலைவாய்ப்புகள் முழுவதையும் அழித்து விடும் என அவர் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுவதும் வேலையில்லாப் பிரச்சினையை உருவாக்க காத்திருக்கும் ரோபோக்கள் Reviewed by NEWMANNAR on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.