அண்மைய செய்திகள்

recent
-

-மன்னார் கட்டுக்கரை மீனவர் சந்தை திறந்து வைப்பு-நன்னீர் மீனவ அமைப்புக்களுக்கு ஓடங்களும் வழங்கி வைப்பு.(படம்)

வடமாகாண மீன் பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக   மன்னார் மறை மாவாட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக  அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுக்கரை மீனவர் சந்தையை திறந்து வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2015 ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஓடங்கள்(வள்ளம்) வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது சன்னார் நன்னீர் மீன்பிடி அமைப்பிற்கு 5 ஓடங்களும்,கூராய் நன்னீர் மீன்பிடி அமைப்பிற்கு 6 ஓடங்களும்,அகத்தி முறிப்பு நன்னீர் மீன்பிடி அமைப்பிற்கு 5 ஓடங்களும்,பெரியமடு நன்னீர் மீன்பிடி அமைப்பிற்கு 5 ஓடங்களும்,தட்சனா மருதமடு நன்னீர் மீன்பிடி அமைப்பிற்கு 5 ஓடங்களும்,வியாட்டிக்குளம் நன்னீர் மீன்பிடி அமைப்பிற்கு 6 ஓடங்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு காடற்தொழில் பாதுகாப்பு அங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



(மன்னார் நிருபர்)

(18-2-2016)











-மன்னார் கட்டுக்கரை மீனவர் சந்தை திறந்து வைப்பு-நன்னீர் மீனவ அமைப்புக்களுக்கு ஓடங்களும் வழங்கி வைப்பு.(படம்) Reviewed by NEWMANNAR on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.