அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி வருடாந்த செயற்பாடுகளில் ஒன்றான கண்காட்சி நிகழ்வு 09.03.2016

 மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி வருடாந்த செயற்பாடுகளில் ஒன்றான கண்காட்சி நிகழ்வு 09.03.2016 புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வானது மு.ப.9.00 மணி தொடக்கம் பி.ப.4.30 மணி வரை இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வில்; முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர், புனித செபஸ்தியார் பேராலய உதவி பங்குத்தந்தை, வேள்ட் விசன் கல்வி திட்ட இணைப்பாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், முன்பள்ளி முகாமைத்துவ குழு கலந்துகொண்டனர்

அத்துடன் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்கங்கள் சிறப்பானதாகவும், வியப்பூட்டுவதாகவும் காணப்பட்டது.

இந்நிகழ்வினை பல மக்கள் கண்டுகளித்ததுடன், பல முன்பள்ளி ஆசிரியர்கள் சிறார்கள் பெற்றோர்கள் என மக்கள் திரண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அனேகரின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து 10.03.2016 திகதி காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.30 வரை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. பார்த்துப் பயன்பெறுமாறு அழைத்து நிற்கின்றோம்.

இந்நிகழ்வானது சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் முகாமைத்துவ குழு ஏற்பாட்டில் நடைபெற்றது

அத்துடன் முன்பள்ளி முகாமைத்துவ குழுவினால் முன்பள்ளியின் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதுடன் 35 சிறுவர்

பிளாஸ்ரிக் கதிரைகள், 01 பெரிய அலுமாரி முன்பள்ளிக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

(இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சகல படங்களையும் காட்சிப்படுத்தவும்)

முன்பள்ளி முகாமைத்துவ குழு,

பூண்டி மாதா முன்பள்ளி,

எமில்நகர், மன்னார்.








மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி வருடாந்த செயற்பாடுகளில் ஒன்றான கண்காட்சி நிகழ்வு 09.03.2016 Reviewed by NEWMANNAR on March 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.