மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்-முழுமையான விபரம் எமது இணையத்தின் ஊடாக...Video,
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 02வது தடவையாக திங்கள் கிழமை மாலை 03 மணிக்கு ஆரம்பமானது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரியவின் ஒருங்கிணைப்பின் கீழ் இடம் பெற்றது.
இவ்நிகழ்வில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான் இ.சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் குறித்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வைத்திய கலாநிதி சிவமோகன் சிவசக்தி ஆனந்தன் சாந்தி இவர்களுடன் வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா அவர்களுடன் சத்தியலிங்கம் உறுப்பினர்களான வைத்த்யர் குனசீலன் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா றிப்கான் பதியூதீன் ஆகியோர் கலந்து கொண்டதோடு பிரதேசச் செயலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டதில் உள்ள 05 பிரதேசத்தினையும் 12பிரதான தினணக்களங்கள் உள்ளடக்கியதாக மன்னார் மாவட்டத்தில் கல்வி-சுகாதாரம்-போக்குவரத்து- குடி நீர்-மின்சாரம்- விவசாயம்- மீன்பிடி போன்ற துறைகள் குறித்தும் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல விதமான பிரச்சினைகள் குறித்தும் உரிய அதிகாரிகளோடு கலந்துரையாடப்பட்டுள்ளதோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்கள் கூட்டாக கோரிக்கை முன் வைத்தனர்.
பிரதான திட்டங்கள் முன்வைப்பு தீர்வு....
இக்குழுக்கூட்டத்தில் பல விடையங்கள் ஆரயப்பட்டனமுன்யை கூட்டத்தில் கலந்தாரயப்பட்ட விடையங்களையும் இக்கூட்டம் உள்வாங்கியது காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றது சிலதீர்மானங்களும் எடுக்கப்பட்டது
மண் அகழ்வு----
கூராய் தெளிவாறு பகுதியிலும்
கல்லாறு பகுதியிலும்
பேசாலை கடற்கரைப்பகுதியிலும்
புதுக்குடியிருப்பு பகுதியிலும்
கள்ள மண் அகழ்வு நடைபெறுகின்றது இவ்மண் அகழ்வினால் பல விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதுடன்வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது இதற்கான தீர்வாக உடனடியாக அகழ்வினை நிறுத்துதல் மண்விற்பனையாளர்களுக்கு அனுமதியை நிறுத்துதல் முதலில்மக்கள் பாவனைக்கு மண் வழங்குதல் இதற்கு பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பொறுப்புடையவராக உள்ளனர்.
வடக்கின் வசந்தம் மின்சாரம் வழங்குதல்….
வடக்கின் வசந்தம் மூலம் 5014 மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளத
மன்னாருக்கு 763 மின்னிணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது
இன்னும் 3000மின்னிணைப்புகள் வழங்கப்பட வேண்டும்
1500விண்ணப்பங்கள் கைவசம் உள்ளது
2200 வீடுகளின் பாவனையாளர்கள் இலவசமாக எதிர்பார்ப்பு
வடக்கின் வசந்தம் மூலம் மின்னிணைப்பினைப்பெற்றுக்கொண்டவர்களும் பெற இருப்பவர்களும் இடைநிறுத்தப்பட்டிருந்தது தேவையானவர்களுக்கு மின்னிணைப்பை வழங்குங்கள் அரசாங்கத்தினருடன் கலந்தாராய்ந்து மானியமுறையில் மின்கட்டணத்தினைப்பெற்றுக்கொள்ளும் படியும் சில சமயம் அரசாங்கமே முழுப்பொறுப்பேற்கும் பொருட்டு முடிவெடுப்போம.
மன்னார் மக்களுக்கு உப்பு
மன்னார் உப்பளத்தில் 5000 தொன் உப்பு கையிருப்பு
மன்னார் மக்களுக்கு 60 தொன் உப்பு போதுமானது
மன்னாரில் உள்ள மீனவர்களுக்கான உப்பின் தேவை அதிகமாகவுள்ளது முதல் ஒரு உப்பு மூட்டையின் விலை 800 தற்போது உப்பின் ஒரு மூட்டையின் விலை 1650
மீனவர்களுக்கும் மக்களுக்கும் நியாயமான விலையில் உப்பை வழங்கவேண்டும் அதேவேளை ஏனைய வர்த்தகர்களுக்கு திறந்த கேள்வி கோரலின் மூலம் வழங்கலாம் எனத்தீர்மானம்.
கிராமத்தின் வீதிகள் புனரமைப்பு….
மன்னாரில் 1955 வீதிகள் உள்ளது இதில் 1253 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் அவசரமாக 1512கிலோ மீட்டர் புனரமைக்கப்படவேண்டும் ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 70 கிலோ மீற்றர் வீதம் 13 கிலோ மீட்டர் வீதமும் புனரமைக்கத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் இழுவைப்படகு,,,,
இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகள் 2014-2015 வரை 71 படகுகள் பிடிபட்டது மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. துற்போது தலைமன்னாரில் 06 படகுகளும் தாழ்வுபாட்டில் 03 படகுகளும் கடற்படையினரின் பொறுப்பில் உள்ளது இந்திய மீனவர்களின் வருகையினை தகுந்த முறையில் கைளாவேண்டும்.
மீள் குடியமர முடியாத நிலையில்....
மன்னார் மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் மீள் குடியமர முடியாத நிலையில் உள்ள மக்களை மீள் குடியேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மன்னாரில் உள்ள வெறுமையான வீடுகளுக்கு மக்களை மீளக்குடியமர்த்தல் மன்னார் புத்தளம் முஸ்லீம் மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக அவர்களின் நிலை வாழ்வாதாரப்பிரச்சினை ஏனைய வசதிகளை கருத்தில் கொண்டு 1-3வருடத்திற்குள் மன்னாரில் குடியமர்த்தவும் பாடசாலைகளை மன்னாரில் நிறுவுவதற்கும் தகுந்த ஏற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும் எனத்தீர்மானம்.
தண்ணீர் வழங்குதல்
2009ம் ஆண்டு 200மில்லியன் ரூபா செலவில் செயற்திட்டம் தேவன் பிட்டி-அடம்பன் விடத்தல் தீவு செயற்படுத்தப்பட்து.
தற்போது 23 மில்லியன் ரூபா செலவில் நு.ரு செயற்திட்டத்தின் மூலம் வியாடிக்குளம் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது முதலில் தேவையுள்ள உள்ள பெரியமடு சன்னார் மக்களுக்கு கொடுங்கள் மிகவிரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்
முசலிப்பிரதேசத்திலும் நீர்ப்பற்றாக்குறையாகவுள்ளது தீர்க்கப்படாவிட்டால் பிரதேச சபை இயங்க முடியாத நிலை ஏற்படும்.
தேவன்பிட்டி வாழ் மக்களுக்கு..... அவர்களின் பொருளாதாரத்தினை கருத்திற் கொண்டு அரச காணியை இனம் கண்டு 50ஏக்கர் காணியை 1ஏக்கர் வீதம் மிகவும் வறியவர்களுக்கு பிரித்து கொடுத்தல்.
தனி நபர் ஒருவருக்கு 50ஏக்கர் காணியை விட மேலதிகமாக இருக்கின்றவர்களின் விபரம் திரட்டல்....
65000 வீட்டுத்திட்ட்த்தினை நல்ல முறையில்.....
தற்போது வந்துள்ள 65000 வீட்டுத்திட்ட்த்தினை நல்ல முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சர்கள் உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும்
சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம்
சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மன்னார்மாவட்டத்தில் எமில் நகர்ப்பகுதியில் அமைப்பதற்கு இடம் பார்வையிட்டதுடன் மைதானம்அமைப்பதாக தீர்மாணிக்கப்பட்டது பின் நிலத்தினை பரிசோதனை செய்தவர்கள் தாழ்நிலப்பிரதேசமாகவுள்ளதாகவும் கடல் அருகில் உள்ளதாகவும் இங்கு மைதானம்அமைத்தால் மேலதீகமாக 57 மில்லியன் செலவு ஏற்படும் என்பதால் நறுவிளிக்குளத்திற்கு நானாட்டான் அருகில் மைதானம் அமைக்கத்தீர்மானம். இத்தீர்மானம் குழப்ப நிலையில் உள்ளது காரணம் மைதானமானது நகரப்பகுதியில் அமைந்தால் தான் மாணவர்களின் விளையாட்டுச்செயற்பாடு விருத்தியடையும் 57 மில்லியன் மேலதிக செலவு என்பதைவிட வீரவீராங்கனைகளுக்கு சிரமம் அதே வேளை விருப்பமானமுறையில் அமையவேண்டும் என்பதே பெரும்பான்மையானவர்களின் விருப்பமாகவுள்ளது…
இவ்விடையங்களோடு இன்னும் பல விடையங்கள் ஆரயப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளதுடன் காலஅவகாசமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது….
மன்னாரில் சட்டவிரோதமாக இடம் பெறுகின்ற அனைத்து குற்றச்செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனுக்குடன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் காவல் துறையினர் கடற்படையினர் பாதுகாப்பு படையினர்
மன்னாரின் அபிவிருத்திக்கு எல்லோரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் ஏன் எனில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே எமது கடமையாகும்
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கடந்த 3 வருடங்களாக இடம்பெறாது இருந்த தடவையாக மூன்று கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் 4பேர் ஒற்றுமையுடன் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இன்றி ஒற்றுமையாக அபிவிருத்திக்குழு கூட்டத்தை நடத்தியமை விசேட அம்சமாகும்.
2015 ஆண்டு அபிவிருத்தியை விட 2016ஆண்டு அபிவிருத்தி செயற்பாடுகள் சம்மந்தமாக காரசரமான விவாதங்கள் இடம் பெற்றது இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தால் மன்னார் மிகவிரைவில் அபிவிருத்தியினை சிறப்பான மாவட்டமாக அமைந்து விடும் ....
---மன்னார் விழி---
இவ்நிகழ்வில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான் இ.சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் குறித்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வைத்திய கலாநிதி சிவமோகன் சிவசக்தி ஆனந்தன் சாந்தி இவர்களுடன் வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா அவர்களுடன் சத்தியலிங்கம் உறுப்பினர்களான வைத்த்யர் குனசீலன் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா றிப்கான் பதியூதீன் ஆகியோர் கலந்து கொண்டதோடு பிரதேசச் செயலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டதில் உள்ள 05 பிரதேசத்தினையும் 12பிரதான தினணக்களங்கள் உள்ளடக்கியதாக மன்னார் மாவட்டத்தில் கல்வி-சுகாதாரம்-போக்குவரத்து- குடி நீர்-மின்சாரம்- விவசாயம்- மீன்பிடி போன்ற துறைகள் குறித்தும் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல விதமான பிரச்சினைகள் குறித்தும் உரிய அதிகாரிகளோடு கலந்துரையாடப்பட்டுள்ளதோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்கள் கூட்டாக கோரிக்கை முன் வைத்தனர்.
பிரதான திட்டங்கள் முன்வைப்பு தீர்வு....
இக்குழுக்கூட்டத்தில் பல விடையங்கள் ஆரயப்பட்டனமுன்யை கூட்டத்தில் கலந்தாரயப்பட்ட விடையங்களையும் இக்கூட்டம் உள்வாங்கியது காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றது சிலதீர்மானங்களும் எடுக்கப்பட்டது
மண் அகழ்வு----
கூராய் தெளிவாறு பகுதியிலும்
கல்லாறு பகுதியிலும்
பேசாலை கடற்கரைப்பகுதியிலும்
புதுக்குடியிருப்பு பகுதியிலும்
கள்ள மண் அகழ்வு நடைபெறுகின்றது இவ்மண் அகழ்வினால் பல விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதுடன்வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது இதற்கான தீர்வாக உடனடியாக அகழ்வினை நிறுத்துதல் மண்விற்பனையாளர்களுக்கு அனுமதியை நிறுத்துதல் முதலில்மக்கள் பாவனைக்கு மண் வழங்குதல் இதற்கு பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பொறுப்புடையவராக உள்ளனர்.
வடக்கின் வசந்தம் மின்சாரம் வழங்குதல்….
வடக்கின் வசந்தம் மூலம் 5014 மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளத
மன்னாருக்கு 763 மின்னிணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது
இன்னும் 3000மின்னிணைப்புகள் வழங்கப்பட வேண்டும்
1500விண்ணப்பங்கள் கைவசம் உள்ளது
2200 வீடுகளின் பாவனையாளர்கள் இலவசமாக எதிர்பார்ப்பு
வடக்கின் வசந்தம் மூலம் மின்னிணைப்பினைப்பெற்றுக்கொண்டவர்களும் பெற இருப்பவர்களும் இடைநிறுத்தப்பட்டிருந்தது தேவையானவர்களுக்கு மின்னிணைப்பை வழங்குங்கள் அரசாங்கத்தினருடன் கலந்தாராய்ந்து மானியமுறையில் மின்கட்டணத்தினைப்பெற்றுக்கொள்ளும் படியும் சில சமயம் அரசாங்கமே முழுப்பொறுப்பேற்கும் பொருட்டு முடிவெடுப்போம.
மன்னார் மக்களுக்கு உப்பு
மன்னார் உப்பளத்தில் 5000 தொன் உப்பு கையிருப்பு
மன்னார் மக்களுக்கு 60 தொன் உப்பு போதுமானது
மன்னாரில் உள்ள மீனவர்களுக்கான உப்பின் தேவை அதிகமாகவுள்ளது முதல் ஒரு உப்பு மூட்டையின் விலை 800 தற்போது உப்பின் ஒரு மூட்டையின் விலை 1650
மீனவர்களுக்கும் மக்களுக்கும் நியாயமான விலையில் உப்பை வழங்கவேண்டும் அதேவேளை ஏனைய வர்த்தகர்களுக்கு திறந்த கேள்வி கோரலின் மூலம் வழங்கலாம் எனத்தீர்மானம்.
கிராமத்தின் வீதிகள் புனரமைப்பு….
மன்னாரில் 1955 வீதிகள் உள்ளது இதில் 1253 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் அவசரமாக 1512கிலோ மீட்டர் புனரமைக்கப்படவேண்டும் ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 70 கிலோ மீற்றர் வீதம் 13 கிலோ மீட்டர் வீதமும் புனரமைக்கத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் இழுவைப்படகு,,,,
இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகள் 2014-2015 வரை 71 படகுகள் பிடிபட்டது மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. துற்போது தலைமன்னாரில் 06 படகுகளும் தாழ்வுபாட்டில் 03 படகுகளும் கடற்படையினரின் பொறுப்பில் உள்ளது இந்திய மீனவர்களின் வருகையினை தகுந்த முறையில் கைளாவேண்டும்.
மீள் குடியமர முடியாத நிலையில்....
மன்னார் மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் மீள் குடியமர முடியாத நிலையில் உள்ள மக்களை மீள் குடியேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மன்னாரில் உள்ள வெறுமையான வீடுகளுக்கு மக்களை மீளக்குடியமர்த்தல் மன்னார் புத்தளம் முஸ்லீம் மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக அவர்களின் நிலை வாழ்வாதாரப்பிரச்சினை ஏனைய வசதிகளை கருத்தில் கொண்டு 1-3வருடத்திற்குள் மன்னாரில் குடியமர்த்தவும் பாடசாலைகளை மன்னாரில் நிறுவுவதற்கும் தகுந்த ஏற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும் எனத்தீர்மானம்.
தண்ணீர் வழங்குதல்
2009ம் ஆண்டு 200மில்லியன் ரூபா செலவில் செயற்திட்டம் தேவன் பிட்டி-அடம்பன் விடத்தல் தீவு செயற்படுத்தப்பட்து.
தற்போது 23 மில்லியன் ரூபா செலவில் நு.ரு செயற்திட்டத்தின் மூலம் வியாடிக்குளம் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது முதலில் தேவையுள்ள உள்ள பெரியமடு சன்னார் மக்களுக்கு கொடுங்கள் மிகவிரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்
முசலிப்பிரதேசத்திலும் நீர்ப்பற்றாக்குறையாகவுள்ளது தீர்க்கப்படாவிட்டால் பிரதேச சபை இயங்க முடியாத நிலை ஏற்படும்.
தேவன்பிட்டி வாழ் மக்களுக்கு..... அவர்களின் பொருளாதாரத்தினை கருத்திற் கொண்டு அரச காணியை இனம் கண்டு 50ஏக்கர் காணியை 1ஏக்கர் வீதம் மிகவும் வறியவர்களுக்கு பிரித்து கொடுத்தல்.
தனி நபர் ஒருவருக்கு 50ஏக்கர் காணியை விட மேலதிகமாக இருக்கின்றவர்களின் விபரம் திரட்டல்....
65000 வீட்டுத்திட்ட்த்தினை நல்ல முறையில்.....
தற்போது வந்துள்ள 65000 வீட்டுத்திட்ட்த்தினை நல்ல முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சர்கள் உறுப்பினர்கள் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும்
சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம்
சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மன்னார்மாவட்டத்தில் எமில் நகர்ப்பகுதியில் அமைப்பதற்கு இடம் பார்வையிட்டதுடன் மைதானம்அமைப்பதாக தீர்மாணிக்கப்பட்டது பின் நிலத்தினை பரிசோதனை செய்தவர்கள் தாழ்நிலப்பிரதேசமாகவுள்ளதாகவும் கடல் அருகில் உள்ளதாகவும் இங்கு மைதானம்அமைத்தால் மேலதீகமாக 57 மில்லியன் செலவு ஏற்படும் என்பதால் நறுவிளிக்குளத்திற்கு நானாட்டான் அருகில் மைதானம் அமைக்கத்தீர்மானம். இத்தீர்மானம் குழப்ப நிலையில் உள்ளது காரணம் மைதானமானது நகரப்பகுதியில் அமைந்தால் தான் மாணவர்களின் விளையாட்டுச்செயற்பாடு விருத்தியடையும் 57 மில்லியன் மேலதிக செலவு என்பதைவிட வீரவீராங்கனைகளுக்கு சிரமம் அதே வேளை விருப்பமானமுறையில் அமையவேண்டும் என்பதே பெரும்பான்மையானவர்களின் விருப்பமாகவுள்ளது…
இவ்விடையங்களோடு இன்னும் பல விடையங்கள் ஆரயப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளதுடன் காலஅவகாசமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது….
மன்னாரில் சட்டவிரோதமாக இடம் பெறுகின்ற அனைத்து குற்றச்செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனுக்குடன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் காவல் துறையினர் கடற்படையினர் பாதுகாப்பு படையினர்
மன்னாரின் அபிவிருத்திக்கு எல்லோரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் ஏன் எனில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே எமது கடமையாகும்
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கடந்த 3 வருடங்களாக இடம்பெறாது இருந்த தடவையாக மூன்று கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் 4பேர் ஒற்றுமையுடன் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இன்றி ஒற்றுமையாக அபிவிருத்திக்குழு கூட்டத்தை நடத்தியமை விசேட அம்சமாகும்.
2015 ஆண்டு அபிவிருத்தியை விட 2016ஆண்டு அபிவிருத்தி செயற்பாடுகள் சம்மந்தமாக காரசரமான விவாதங்கள் இடம் பெற்றது இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தால் மன்னார் மிகவிரைவில் அபிவிருத்தியினை சிறப்பான மாவட்டமாக அமைந்து விடும் ....
---மன்னார் விழி---
மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்-முழுமையான விபரம் எமது இணையத்தின் ஊடாக...Video,
Reviewed by Author
on
March 15, 2016
Rating:

No comments:
Post a Comment