அண்மைய செய்திகள்

recent
-

கிபி அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப்போட்டி 2016 முடிவுகள்

சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான 'காக்கைச் சிறகினிலே' இதழ்க் குழுமம் ஆண்டு தோறும் கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுத் திட்டமொன்றை நடாத்துவதென அறிவித்தது. அந்தவகையில் கவிஞர் கிபி அரவிந்தனது முலாவது நினைவையொட்டி

'புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016' யை முன்னெடுத்தது. இப்போட்டியின் கடைசி நாளாக 31. 01. 2016 என அறிவிக்கப்பட்டு முடிவு கிபி அரவிந்தன் முதலாவது நினைவு மாதமான மார்ச்சு 2016 இல் அறிவிக்கப்படும் எனவும் வெளிப்படுத்தப்பட்டது.



இதன்படியாக இப்போட்டியின் முடிவு 26. 03. 2016 சனியன்று பாரீசில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

பரிசு பெற்றோர் :



முதற்பரிசு:

குருவிகளின் வீடு - சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)



இரண்டாம் பரிசு :

ஒற்றை யானை - ஜோசப் அமுதன் டானியல்

(மன்னார் அமுதன் - இலங்கை)



மூன்றாம் பரிசு :

முன்னும் பின்னும் சில நாட்குறிப்புகள் - சோ. சுப்புராஜ் (தமிழ்நாடு - இந்தியா)



ஆறுதல் பரிசுகள் :



4 ஒரு கதையும் கருமாந்திரங்களும் - வேலாயுதம் கிருபதாசன் (நெற்கொழு தாசன் - பிரான்சு)

5 அலுவாக்கரை - எஸ்.ஏ.உதயன் (இலங்கை)

6 நீள் பயணம் - இராசு தம்பையா (மணிதாசன் - ஜேர்மனி)



இப்போட்டியின்

நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழுவினராக

மதிப்புக்குரிய அ. முத்துலிங்கம் (கனடா),

மதிப்புக்குரிய மு புஸ்பராசன் (இங்கிலாந்து),

மதிப்பிற்குரிய இளவாலை விஜயேந்திரன் (நோர்வே),

மதிப்புக்குரிய அ. யேசுராசா (இலங்கை),

மதிப்பிற்குரிய ஜோ டி குருஸ் (தமிழ்நாடு)

கலந்து கொண்டனர்.



.........................................................

முதல் பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்

மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்



மூன்று ஆறுதல் பரிசுகள் : காக்கைச் சிறகினிலே ஓர் ஆண்டு வெளிநாட்டுச் சந்தாவும் சான்றிதழும்

...........................................................

தவிர ஆறு சிறுகதைகள் காக்கை இதழில் வெளியிடுவதற்குத் தெரிவாகியுள்ளன.

இந்த விபரம் முறைப்படியாக காக்கை இதழில் வெளியிடப்படும்.

போட்டியில் கலந்து கொண்ட அளைவருக்கும் நன்றிகள் பரிசுகள் முறைப்படி அவர்களது முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கிபி அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப்போட்டி 2016 முடிவுகள் Reviewed by NEWMANNAR on March 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.