மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 44 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 44 இந்திய மீனவர்களை மேலும் எதிர் வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
-தலைமன்னார் மற்றும் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 44 இந்திய மீனவர்களும் இன்று வியாழக்கிழமை விசாரனைக்காக அழைத்து வரப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,அடையாளம் காணப்பட்ட சிறுவர் தொழிலாளர்களை சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் மற்றும் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்கள் ஆகியோரே இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
-24-03-2016
-தலைமன்னார் மற்றும் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 44 இந்திய மீனவர்களும் இன்று வியாழக்கிழமை விசாரனைக்காக அழைத்து வரப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,அடையாளம் காணப்பட்ட சிறுவர் தொழிலாளர்களை சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் மற்றும் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்கள் ஆகியோரே இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
-24-03-2016
மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 44 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
March 24, 2016
Rating:
No comments:
Post a Comment