கரும்புலித் தாக்குதல் வழக்கு;சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு
அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது கடந்த 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் தொடர்பில் கைதான இரு முன்னாள் போராளிகளுக்கும் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதவான் ஹேமா ஸ்வர்ணாதிபதி மறுப்பு தெரிவித்தார்.அத்தோடு,சந்தேகநபர்களான யாழ்.சங்கானையைச் சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் வான்புலி அமைப்பின் முன்னாள் தலைவரென கூறப்படும் இராசவல்லன் தவரூபன் ஆகிய இருவரையும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதுடன் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதவான் ஹேமா ஸ்வர்ணாதிபதி மறுப்பு தெரிவித்தார்.அத்தோடு,சந்தேகநபர்களான யாழ்.சங்கானையைச் சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் வான்புலி அமைப்பின் முன்னாள் தலைவரென கூறப்படும் இராசவல்லன் தவரூபன் ஆகிய இருவரையும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 400 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதுடன் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கரும்புலித் தாக்குதல் வழக்கு;சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு
Reviewed by Admin
on
March 30, 2016
Rating:

No comments:
Post a Comment