ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பரவலாக்கி தீர்வுகளை பெற்றுக் கொள்வோம் ...
ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பரவலாக்கி ஒரேநாடு என்ற சித்தாந்தத்தில் நாம் அனைவரும் இணைந்து எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்வோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதிகாரப் பரவலாக்களை எதிர்ப்பவர்கள் " கல் யுகத்திற்கு "செல்ல விரும்புபவர்கள் அத்தோடு இவர்கள் கோத்திரவாதிகள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஹிக்கடுவையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாகாண சபைகள் முதலமைச்சர்களின் சம்மேளனத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்துக் கொள்ள விரும்புவதில்லை. மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், ஜனநாயக உரிமைகள், சுதந்திரம் போன்றவற்றை உள்ளடக்கியதாகவே இன்றைய உலகில் அரசியலமைப்பு தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் எதிர்காலம் பலவீனமடையாது பாதுகாக்கப்படமுடிகின்றது.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பரவலாக்கி தீர்வுகளை பெற்றுக் கொள்வோம் ...
Reviewed by Author
on
March 22, 2016
Rating:

No comments:
Post a Comment