அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்முறைகள்! மீண்டும் ஒரு சம்பவம் பதிவு...


வவுனியாவில் மீண்டும் 10 வயது சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதில் சந்தேகநபராக கருதப்படும் 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
வவுனியா, கணேசபுரம் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை அழைத்து, அயல்வீட்டில் இருக்கும் 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதன் போது சிறுமி சாதுரியமாக கதறிக் கொண்டு தப்பியோடியதால் சிறுமியின் வீட்டுக்கு தகவல் தெரிந்து துஸ்பிரயோக முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிஸில் நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, சந்தேகநபரான 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியாவில் கடந்த 16 ஆம் திகதி ஹரிஸ்ணவி என்ற மாணவி துஸ்பிரயோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை வவுனியா தரணிக்குளத்தில் 11 வயது சிறுமி மீது துஸ்பிரயோகம், கனகராயன்குளத்தில் 5வயது சிறுமி மீது துஸ்பிரயோகம் என்பன தொடர்பாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்முறைகள்! மீண்டும் ஒரு சம்பவம் பதிவு... Reviewed by Author on March 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.