அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலை மாவட்ட பெண்கள் அமைப்பினர் வட மாகாண முதலமைச்சரிடம் மகஜர் கையளிப்பு-Photos


வடகிழக்கு மாகாணங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகளவில் நடந்து வரும் நிலையில் பெண்களை பாதுகாப்பதற்கான சட்டத் திருத்தங்களை செய்யவும் விசேட நீதிமன்றங்களை அமைக்க வலியுறுத்தியும் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு வடமாகாண முதலமைச்சருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.

இன்றைய தினம் காலை 10 மணிக்கு முதலமைச்சர் அலுவலகம் முன்பாக கூடிய பெண்கள் அமைப்பினர் பெண்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தும் பதாகைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் கூடியதுடன்

* பெண்கள் மீதான வன்முறைகளை கட்டுப் படுத்தும் சட்டத்திருத்தங்கள் வேண்டும்.

* பெண்கள் மீதான வன்முறைகளை செய்த குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்ப டக்கூடாது.

* பெண்கள் மீதான வன்முறைகளை சட்ட த்தின் முன் நிறுத்தி விசாரிக்க விசேட நீதி மன்றங்கள் உருவாக்கப்படவேண்டும்.

* பெண்கள் மீதான பாலியல் குற்றங்களின்போது மரபணு பரிசோதனை அறிக்கை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படவேண்டும்.

* பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டணையிலும் பார்க்க உச்ச தண்டணை வழங்கப்படவேண்டும்.

என்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றை முதலமைச்சரிடம் கையளித்துள்ளனர்.











திருகோணமலை மாவட்ட பெண்கள் அமைப்பினர் வட மாகாண முதலமைச்சரிடம் மகஜர் கையளிப்பு-Photos Reviewed by NEWMANNAR on March 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.