எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை நிராகரித்தனர் அரசியல் கைதிகள்
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பு முன்னெடுத்த கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்களை அறிவிக்க மெகசீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதே, அவர்கள் இவ்வாறு கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக இவ்வாறு உண்ணாவிரதத்தை முன்னெடுத்த போது, அவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதி அளித்த போதும், அவர் அதனை நிறைவேற்றவில்லை என கைதிகள் இதன்போது கூறியுள்ளனர். இதனாலேயே எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததாக சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளை பார்வையிட்ட சார்ள்ஸ் மற்றும் சிறிதரன்
நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மகசீன் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச அரசால் பழிவாங்கப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவிற்கு இந்த அரசாங்கம் பீல்ட் மார்ஷல் பதவியும் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியையும் கொடுக்கும் பொழுது ஏன் எமது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை நிராகரித்தனர் அரசியல் கைதிகள்
Reviewed by NEWMANNAR
on
March 09, 2016
Rating:

No comments:
Post a Comment