மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மகளீர் தின நிகழ்வு.-Photos
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் WUSC நிறுவனத்தின் அனுசரணையுடன் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் மகளீர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் குறித்த மகளீர் தின நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்டான்லி டி மெல் , மற்றும் பிரதேசச் செயலாளர், WUSC நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் வண்முறைகள் குறித்து விசேட பட்டிமன்றம் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மகளீர் தின நிகழ்வு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 23, 2016
Rating:

No comments:
Post a Comment