அண்மைய செய்திகள்

recent
-

செவ்வாய் கிரகத்திற்கு புதிய விண்கலம்: அபார சாதனை படைத்த சுவிட்சர்லாந்து...


செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள சுவிஸ் விஞ்ஞானிகள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கமெரா ஒன்றை வடிவமைத்து அனுப்பி சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்குழு தயாரித்த TGO என்ற விண்கலம் ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலத்தில் பேர்ன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சுவிஸ் மற்றும் பிற நாடுகளின் விஞ்ஞானிகள் தயாரித்த CaSSIS என்ற அதிநவீன கமெரா ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

சூரிச் மற்றும் லவ்சேன் மாகாணங்களை சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளர்களும் இந்த கமெரா தயாரிப்பில் பெரும் பங்கேற்றுள்ளனர்.

சுமார் 23 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த கமெரா மூலம், செவ்வாய் கிரகத்திற்கு 400 கி.மீ தொலைவில் இருந்து துல்லியமாக புகைப்படங்களை எடுக்க முடியும்.

இது மட்டுமில்லாமல், 180 டிகிரி வட்ட வடிவில் 3D புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பப்பட்டு செவ்வாய் கிரகத்தை பற்றி கூடுதலாக ஆய்வு மேற்கொள்ளலாம்.

19.7 மில்லியன் பிராங்க் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த கமெரா பொருந்திய விண்கலம் சுமார் 7 மாதங்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் அக்டோபர் மாதம் செவ்வாய் கிரகத்திற்கு அருகில் நிலை நிறுத்தப்படும்.

பின்னர், 2017 ஏப்ரல் மாதம் 7ம் திகதி முதல் விண்கலம் செயல்படுத்தப்பட்டு, அதில் உள்ள கமெரா புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


செவ்வாய் கிரகத்திற்கு புதிய விண்கலம்: அபார சாதனை படைத்த சுவிட்சர்லாந்து... Reviewed by Author on March 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.