சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு- தற்கொலை அங்கியை வைத்திருந்தவர் கிளிநொச்சியில் கைது!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைக்குண்டுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இதனுடன் தொடர்புடைய வேறெந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில் தற்கொலை அங்கியை வைத்திருந்தவர் கிளிநொச்சியில் கைது!
யாழ்.மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் 12 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி, கிளைமோர் உள்ளிட்ட அபாயகரமான வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரினால் குறித்த வெடி பொருட்களை பொலிஸார் மீட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து எட்வின் (வயது 31) என்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் கைக்குண்டுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இதனுடன் தொடர்புடைய வேறெந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில் தற்கொலை அங்கியை வைத்திருந்தவர் கிளிநொச்சியில் கைது!
யாழ்.மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து இன்று மதியம் 12 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி, கிளைமோர் உள்ளிட்ட அபாயகரமான வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரினால் குறித்த வெடி பொருட்களை பொலிஸார் மீட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகநபர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் வைத்து எட்வின் (வயது 31) என்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு- தற்கொலை அங்கியை வைத்திருந்தவர் கிளிநொச்சியில் கைது!
Reviewed by NEWMANNAR
on
March 30, 2016
Rating:

No comments:
Post a Comment