அண்மைய செய்திகள்

recent
-

மீன் தடை குறித்து ஆராய பிரஸ்ஸல்ஸ் செல்லும் குழு

ஐரோப்பிய ஒன்றிய மீன் தடை குறித்து ஆராய்வதற்கு இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரஸ்ஸல்ஸ் செல்லவுள்ளது.
பிரதமர் செயலணியைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் அங்கம் வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி ஐரோப்பிய சந்தைக்கு இலங்கை மீன்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது.

மேலும் இந்த தடையை நீக்குவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய குழுவொன்றை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட இக்குழுவே தற்போது பிரஸ்ஸல்ஸ் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, நெதர்லாந்து, மற்றும் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இலங்கை மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மீன் தடை குறித்து ஆராய பிரஸ்ஸல்ஸ் செல்லும் குழு Reviewed by NEWMANNAR on March 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.