விம்பம் பகுதியில் மன்னார் மண்ணின் பெருமை மகத்தான கராத்தே தேசிய வீராங்கனை தாழ்புபாடு மண்ணின் வீர மகள் சூசைநாயகி றெஸ்னிக்கா அவர்களின் அகத்திலிருந்து.....
மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் நம்மோடு பேச வருகிறார் மன்னார் மண்ணின் பெருமை மகத்தான கராத்தே தேசிய வீராங்கனை பயிற்சி பெறும் மருத்துவதாதி கராத்தேயில் மன்னாரின் பெண் பிரதிநிதி தாழ்புபாடு மண்ணின் வீர மகள் சூசைநாயகி எனும் றெஸ்னிக்கா அவர்களின் அகத்திலிருந்து.....
தங்களைப்பற்றி?
எனது செந்த இடம் மன்னார் மாவட்டத்தில் தாழ்வுபாடு எனும் கிராமம் எனது கல்வியினை மன்-புனித-வளனார் வித்தியாலயத்தில் கல்வி பயின்றேன் எனது தந்தை ஜெஸ்மன் பீரிஸ் அம்மா சகாயமேரி எனது சகோதர சகோதரிகள் எனது மைத்துனர் மனோகரன் றெஜினோல்ட் டீன்சன் மகிழ்ச்சியாக வசித்து வருகின்றோம்.
கராத்தேக்கான வரைவிலக்கணம் என்ன?
கராத்தே என்பது தன்னைத்தானே காத்துக்கொள்வதுடன் பிறரையும் காத்துக்கொள்ளும் தற்காப்புக்கலையாகும் எமது உடல் உறுப்பான கையும் காலும் தான் கராத்தேயின் ஆயுதங்கள் ஐப்பான் மொழியில் கை என்பது கரா என்றும் கால் என்பது தே என்றும் கையும் காலும் இணைந்தே கராத்தே ஆனது என்பது உண்டு கராத்தே உருவானது பற்றி பல சுவையான கதைகள் உண்டு எனது பயிற்சியில் கட்டா-தனிபர் போட்டியாகும் அதேவேளை ஒரு வகை நடனம் போலவும் இருக்கும் கபாவ-இருவர் தனது திறமையினை வெளிப்படுத்தும் போட்டியாகும்
தங்களின் கராத்தே கற்றுக்கொள்ள காரணம்?
நாட்டின் யுத்த சூழ்நிலைகாரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக இந்தியா மதுரையில் அகதி முகாமில் தங்கவைக்கபட்டிருந்தோம் அப்போது எனக்கு வயது 04 இருக்கும் எனது தந்தையும் கறுப்பு பட்டி தரம்-3 பெற்ற சிறந்த கராத்தே வீரர் தான் எனது தந்தை தான் செல்லுகின்ற கராத்தே போட்டிகளுக்கு என்னையும் அழைத்துச்செல்வார் நானும் அத்தனை போட்டிகளையும் பார்த்து ரசிப்பேன் ஏன் எனில் வீட்டில் நான் தான் மூத்த பிள்ளை வீட்டில் மற்றவர்களுக்கு பழக்கும் போது எனக்கும் அப்பா கராத்தே பழக்குவார் நானும் விரும்பி பழகுவேன் அப்படியாக எனக்குள் கராத்தே ஆர்வம் உண்டாயிற்று....
இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றதினால் தங்களின் கல்வி நிலை?
இந்தியாவுக்கு சின்ன வயதிலே சென்றதாலும் அகதிகள் முகாமில் இருந்ததாலும் என்னால் கல்வியை தொடர முடியாமல் போனது ஆனால் கராத்தேயில் சிறந்த வீராங்கனையாக மிளிர்ந்தேன் வாழ்க்ககையின் முன்னேற்றத்திற்கு கல்வி அவசியம் ஆதலால் மன்னார் வந்து எனது சாதாரண தரம் உயர் தரம் என்பனவற்றை மன்.புனித.வளனார் வித்தியாலயத்தில் கல்வி பயின்றேன் சித்தியடைந்தேன்.
முதன் முதலில் மேடையில் சண்டை போட்டது ஞாபகம் இருக்கின்றதா?
ஓரளவு ஞாபகம் இருந்தது பின்பு தந்தையிடம் கேட்டு அறிந்து கொண்டேன் அப்போது நாங்கள் இந்தியாவில் இருந்தோம் எனக்கு 04 வயது இருக்கும் சிறுவயதில் ஆண் பெண் என பிரித்துப்பார்க்க மாட்டார்கள் முதல் போட்டியே எனக்கும் ஒரு பையனுக்கும் தான் நான் மேடையில் தயாராக நிற்கிறேன். எனக்கு எனது அப்பாவும் அந்த பையனும் தான் நிற்கிறது தெரிகிறது வேறு யாரையும் தெரியவில்லை போட்டி ஆரம்பமாகிறது. அப்பா சொல்கிறார்
நான் செல்லித்தந்த படியே செய் என்னுடன் சண்டை போடுவது போலவே சண்டையிடு நான் தயாராகிறேன் அப்போது அந்த பையன் ஓங்கி எனக்கு அடித்து விட்டான் பொன் மூக்கு உடைந்த இரத்தம் வருகின்றது. எல்லோரும் என்னை பார்க்கின்றனர் அப்பாவும் கண்கலங்கியவராக அழுது கொண்டு ஓடிவரப்போகிறாளே என்று பார்க்கின்றார் எனது மேடைக்கு முன்பாக எல்லோரும் கூடிவிட்டனர் நான் அழவில்லை மூக்கினால் வழிந்து கொண்டிருக்கும் இரத்தத்தினை துடைத்து விட்டு அந்த பையனை தாக்கினேன்.எனது அடியினால் அவன் கிழே விழுகிறான் அந்தப்போட்டியில் நான் வென்று விட்டேன் எல்லோரும் கைதட்டுகிறார்கள் பாராட்டுகிறார்கள் அந்த நாளை என்னால் இப்பவும் மறக்கமுடியாது.
கராத்தே கலையினால் உங்களால் எத்தனை பேரை சமாளிக்க முடியும்?
ஏத்தனை பேரை என்பதை விட எந்தப்பிரச்சினையில் இருந்தும் இலகுவாக தப்பித்துக்கொள்ள சமாளிக்க என்னால் முடியும் அந்த தைரியத்தினையும் நம்பிக்கையினையும் எனக்கு இந்த கராத்தே கலையினை கற்றுத் தந்த எனது குருவும் தந்தையினால் கிடைத்த அற்புதமான பொக்கிஷம் என்பேன்
கராத்தே கற்றுக்கொள்வதற்கு இருக்கவேண்டிய தகுதிகள் எவையெனக்கருதுகின்றீர்கள்?
கராத்தே கற்றுக்கொள்ள தகுதியென்பது தேவயில்லை மற்ற விளையாட்டிற்கு எப்படி உடல் தகுதி விருப்பம் போதிய ஆளுமை தைரியம் தேவையோ அது போலவே இக்கலைக்கும் முழுமையான விருப்பம் இருந்தால் போதும். அதே போல நாம் பரீட்சை எழுதுவது போல இக்கலைக்கும் கட்டம் கட்டமாக பயிற்சிகள் பரீட்சைகள் உள்ளது ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள கால அவகாசம்
தேவைதான் ஆரம்பத்தில் வெள்ளைப்பட்டி-ஓரேஞ்பட்டி-கிறீன் பட்டி-பிறவுன் பட்டி-கறுப்பு பட்டியிலும் 1-2-3 என மூன்று வகையுள்ளது நான் கறுப்பு 1 எனது தந்தை கறுப்பு-3பட்டியைப்பெற்றவர் மன்னார் மாவட்த்தில் என்னைப்போன்ற கறுப்புப்பட்டி-1முடித்த பெண் வீராங்கனை யாரும் இல்லை என்பேன்.
கராத்தேயில் கறுப்புபட்டி மிகவும் பெருமையான விடையம் அதை எப்போது பெற்றுக்கொண்டிர்கள்?
4வயதில் முதல் போட்டியில் கலந்து கொண்டாலும் 1995-2016 வரை எனது கராத்தேப்பயணம் தொடர்கின்றது நான் வயது அடிப்படையில் 1998ம் ஆண்டு கறுப்புப்பட்டியினை தரம்-1 பெற்றுள்ளேன் இன்னும் தொடர்கிறது எனது வெற்றிப்பயணம்....தொடரும்...
நீங்கள் இந்தக்கலையை ஏனையவர்களுக்கு கற்றுக்கொடுக்க விரும்பவில்லையா?
நான் பல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்துள்ளேன் எனது தந்தையும் கற்றுக்கொடுத்தவர்தான் யுத்த காலங்களில் எமக்கு பிரச்சினை வந்தது மாணவர்களுக்கு இராணுவப்பயிற்சி அளிப்பதாக எச்சரித்தார்கள் அத்தோடு எமது சமூதாயத்திலும் பெற்றோர்களுக்கு இக்கலை மீது பெரிதாக விருப்பம் இல்லை அதைக்கற்று என்ன செய்யப்போகின்றாய் என்ற ஏளனக்கேள்விகள்
குழப்பங்கள் அதனால் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம் அதற்கான ஆதரவும் வாய்ப்பும் அமைந்தால் என்னாலும் எனது தந்தையாலும் பயிற்சிகளை வழங்கி சிறந்த வீர வீராங்கனைகளை மன்னார் மாவட்த்தினில் உருவாக்கமுடியும்
இலங்கையை பொறுத்த மட்டில் கராத்தே கலையில் யார் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளார்கள்?
சிங்கள மக்கள் என்பேன் அவர்கள் கராத்தே கலைக்கும் கராத்தே வீர வீராங்கனைக்கும் மிகுந்த மரியாதை கொடுப்பார்கள் அதே வேளை ஊக்கமும் அளிப்பார்கள் ஆனால் எமது தமிழ் சமூகம் கராத்தேக்கு ஆதரவு என்பதை விட அதுவும் பெண்கள் கராத்தே என்றால் கட்ட காற்சட்டையும் பெனியனும் போட்டுக்கொண்டு அடக்கமில்லாமல் பலருக்கும் முன்னால் துள்ளிக்குதிப்பதா என்றதொரு கலாச்சார முறையினை பிற்பற்றுகின்றனர். அப்படியிருந்து பல பெண்கள் தமது திறமையினை நிரூபிக்கத்தான் செய்கின்றார்கள்.
கராத்தே கற்றுக்கொள்வதால் என்ன பயன் என நினைக்கின்றீர்கள்?
ஒவ்வொரு கலையினையும் கற்றுக்கொள்வதால் பயன் உண்டு கராத்தே எனும் போது ஆணோ பெண்ணோ உடலாலும் உள்ளத்தாலும் உறுதியானவர்களாக உருவாக்கப்படுகிறார்கள் சிலம்பு-வாள் சண்டை இன்னும் பல சண்டை என்று வரும் போது சிலம்புக்கலைஞர் சிலம்பு இருந்தால் தான் சண்டை செய்வார் அதே போல வாள் இருந்தால் தான் சண்டை செய்வார் ஆனால் கராத்தே அவ்வாறு இல்லை எந்த நேரமும் எமது கையும் காலும் எம்மிடம் தான் இருக்கும் அதுவே ஆபத்தெனும் போது
ஆயுதமாகவும் பயன்படும் ஆதலால் கராத்தே கலையானது எமது பயத்தினை அகற்றி பல சாதனைகளை படைக்கும் தைரியத்தினை தரும் அருங்கலையாகும்
சர்வதேசப் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளீர்கள் அந்த வீரர்களோடு ஒப்பிடும் போது உங்கள் நிலை எவ்வாறு உள்ளது?
இலங்கை இந்தியா ஏனைய நாடுகள் கராத்தே எனும் போது சட்டமும் விதிகளும் ஒன்றுதான் நான் இந்தியாவில் கராத்தே கற்றிருந்தாலும் 10 நாடுகளுக்குமேல் கலந்து கொண்ட போட்டியில் கலந்து கொண்டு 'காட்டா' போட்டியில் 2ம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும்
'குமுக்தே' என்றபோட்டியில் 3ம் இடத்தினைபெற்று வெண்கலப்பதக்கத்தினையும் சர்வதேச ரீதியில் இடங்களைப்பெற்றுள்ளேன். எனது தகுதியும் ஏனைய வீரர்களோடு ஒப்பிடும் போது ஒரு படி மேல் என்று தான் சொல்லுவேன் காரணம் ஏனைய வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அதற்குரிய வழிகாட்டல்கள் வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகின்றன இலங்கை சக சிங்கள வீரவீராங்களைகளைப்பொறுத்தமட்டிலும் அவ்வாறுதான் அத்தேர்டு அவர்களுக்கான மாத ஊதியமாக வழங்கப்படுகின்றது. என்னைப்போன்ற தமிழ் வீராங்கனைகள் பொருளாதாரத்திற்கும் தனியாக உழகை;க வேண்டும் அதேநேரம் இக்கலையினையும் அழியவிடாமல் சாதிக்கவேண்டும் அவர்களுக்கு அவ்வாறில்லை தொழிலும் கலையும் ஒன்றுதான் அதற்கு மாதச்சம்பளமும் கிடைக்கின்றது மற்றபடிப்பார்க்கையில் நான் ஒரு படி மேல் தானே....
கராத்தே விராங்கனையான நீங்கள் பெண்களுக்கான ஆலோசனை?
பெண்கள் நாட்டிலும் சரி வீட்டிலும் சரி இன்னும் முழுமையாக சுகந்திரமானவளாக இல்லை அவள் எங்கு சென்றாலும் தரக்குறைவாகவும் ஏளனமாகவும் தான் பார்கின்றார்கள் இந்நிலை மாற வேண்டுமானால் பெண்களாகிய நாம்தான் எல்லா வழிகளிலும் எங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் பெண்கள் தைரியமானவர்களாகவும் எதையும் சாதிக்கக் கூடியவர்களாகவும் இருக்க தங்களிடம் இருக்கின்ற திறமையினை இனம் கண்டு வெளிக்கொண்டு வரவேண்டும் என்னை வெளிப்படுத்தியது எனது கராத்தே கலைதான் அந்தக்கலையால் நான் இன்று தைரியமானவளாக சமுதாயத்தில் எல்லேராலும் பேசப்படுகின்ற அளவில் இருக்கின்றேன். பெண்களாககிய நாம் உடலாலும் உள்ளத்தாளும் உறுதியாக வேண்டும் ஆளுமையானவர்களாக இந்த அகிலத்தை ஆளப்புறப்படவோம்.
கராத்தேயில் உங்களின் அடுத்த இலக்கு என்ன?
கராத்தே போட்டிகளில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும் எல்லோருக்கும் உள்ள கனவு போல ஒலிம்பிக்கில் சாதித்து எனது தாய்நாட்டிற்கும் எனது மாவட்டத்திற்கும் இனத்திற்கும் பெருமையினைத்தேடித்தர வேண்டும் அதற்குரிய ஆளுமையும் திறமையும் என்னிடம் உள்ளது. ஆனால் எனக்கு இன்னும் பயிற்சி வேண்டும் தற்போது எனது வாழ்வை கொண்டு செல்ல பொருளாதார பிரச்சினையை சமாளிக்க பயிற்சிபெறுகின்ற மருத்துவதாதியாக மன்னார் பொதுவைத்திய சாலையில் கடமையாற்றி வருகின்றேன். பெண்களுக்கான பொறுப்புக்கள் அதிகம் அதையும் தாண்டி என்னால் சாதிக்க முடியும் என்னைப்பபேன்ற பல பெண்கள் சாதித்துக்கொண்டுதான் உள்ளார்கள் எனக்கு தகுந்த ஊக்குவிப்பும் ஊக்கமும் சந்தர்ப்பம் கிடைக்குமானால் நிச்சயமாக என்னால் ஒலிம்பிக்தங்கத்தினை எனது தாய்நாட்டிற்கு பெற்றுத்தர முடியும். இது எனது கலையின் மீதும் எனது திறமையின் மீதும் நம்பிக்கையுடையவளாக சொல்கிறேன்.
தங்களின் திறமையினை வெளிக்கொணர்ந்த பயிற்றுவிப்பாளர்கள் பற்றி?
நான் இந்தியாவில் இருந்த போது ஜெஸ்மன் பீரிஸ்(யூட் செபஸ்தியான் பீரிஸ்)எனது தந்தையாகவும் குருவாகவும் இருந்தார். சிறப்பு பயிற்றுவிப்பாளர்களாக இந்தியாவைச்சேர்ந்த ராஜசேகர் மற்றும் சந்திர சேகர் இவர்களுடன் இலங்கையில் சிறப்பு பயிற்சியாளரான பிரதம பயிற்சியாளார் பி.ஏ.ரைற்றஸ் பெரேரா இவர்களை என் வாழ்நாளில் என்றுமே மறக்கமுடியாது. நான் சிறந்த கராத்தே வீராங்கனையாக திகழ்வதற்கு இவர்களின் வழிகாட்டலும் பயிற்சியும் எனது கடின உழைப்பும் தான் என்பேன்.
கராத்தே தவிர ஏனைய துறைகளில் ஆர்வம் உள்ளதா?
ஆம் கராத்தே தவிர்ந்து கபடி-எல்லே-கிறிக்கெட்-வலைப்பந்து கரப்பந்து-உதைபந்து போன்ற விளையாட்டுக்களிளும் மாவட்டம் மாகாணம் வெற்றிக்கிண்ணங்கள் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன் அத்தோடு நடனம் பாடல் கல்வியிலும் திறமையுள்ளவளாகத் உள்ளேன்.தற்போதைய சூழலில் பெண்கள் பல வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றார்கள் அதற்கு தங்களின் கருத்து தற்போதைய சூழலில் பெண்கள் சொல்லெனாத்துயரங்களை அனுபவிக்கின்றார்கள் தற்போது பாலியல் கல்வியை 03ம் தரத்தில் இருந்து கற்பிக்க முடிவு செய்துள்ளார்கள் அதுபோல இப்படியான பிரச்சினைகளுக்கு தகுந்த தண்டணைகள் வழங்க வேண்டும் கராத்தே கலையினை
சிலம்புக்கலையினை இந்தியாவில் பாடசாலையில் ஒருபாடமாக கற்பிக்கின்றார்கள் அது போல இலங்கையிலும் ஒருபாடமாக கற்பிக்க வேண்டும் பெண்கள் விழிப்புனர்வு பெறவேண்டும் அதற்கு இப்படியான கலைகள் பயிற்சிகள் அவர்களிடம் உள்ள பயத்தினை அகற்றி துணிவுள்ளவர்களாக இருந்தால் இவ்வாறான தொல்லைகளில் இருந்து பெண்கள் விடுதலை அடைவார்கள் சுகந்திரமாக வாழ்வார்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.
மன்னார்மாவட்டமானது விளையாட்டுத்துறையில் எந்த நிலையில் உள்ளது?
மன்னார் மாவட்டமானது இன்னும் விளையாட்டுத்துறையில் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது ஏனைய மாவட்டங்களைப்பொறுத்தமட்டில் ஆனால் எல்லாத்துறைகளிலும் திறமையான வீரவீராங்கனைகள் உள்ளனர் அவர்களுக்கான பயிற்சிகள் பெறுவதற்கான வளங்கள் பயிற்றுவிப்பாளர்கள் போதனாசிரியர்கள் வழிகாட்டல்கள் இல்லை இருக்கின்ற வளங்களையாவது வீரவீராங்கனைகளுக்கு பயன்படுத்த கொடுக்கலாம் என்றால் அதற்கும் மன்னார் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பொது உள்ளகவிளையாட்டரங்கு இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை இப்படி இருந்தால் எவ்வாறு விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் வரும் இந்தப்பிரச்சினைகளை விளையாட்டு அதிகாரிகள் உடனடியாக தீர்த்து விளையாட்டுத்துறையினை மேம்படுத்த முன் வரவேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோளாகும்.
தங்களால் கராத்தேயில் சாதித்த வெற்றிக்கிண்ணங்கள் சாண்றிதழ்கள் பற்றி?
கராத்தேயினை சிறுவயதிலே 04ஆரம்பித்தாலும் 08-10வயதிற்கு இடையில் மதுரையில் நடைபெற்ற கராத்தேப்போட்டியில் மதுரை மக்கள் சார்பாக போட்டியிட்டு காட்டா மற்றும் குமுத்தே போட்டியில் 15 தடவைக்கு மேல் 1ம்-2ம் இடங்களைப்பெற்று சாதனைபடைத்துள்ளேன். 2004 வரை மன்னாருக்கு வரும் வரை மதுரையில் பல போட்டிகளில் சான்றிதழ்களைப்பெற்று மதுரை
கலெக்டர் பொலிஸ்மா அதிபர் பெரியோர்களால் பாராட்டப்பட்டுள்ளேன்
மேலும்
1. Tamil naadu Karate to Association 2nd place kata 27-12-1998
2. Tamil naadu Alan Chilak Shito-Ryu Karate Tounament 2nd place
Boys&Girls
3. Tamil naadu Alan Tilak Karate Inter National 3rd place Karate Girls
4. Tamil naadu Alan Tilak Karate Inter School 1st place Individiual Karate
Girls-29-06-1997
5. Tamil naadu Madurai Alan Tilak Karate Individual 1st Shiai For Girls
6. Tamil naadu Thoothukudi Districk Sports Karate Association 3rd In
Individual Kumite colour Belt 1-15 Girls
7. Indian Karate Martial Arts 1st kata-2004
8. Madurai Koodal Nagar St.Antony’s Girls School Ranning 1st 03-06-2004
9. Sri Lanka Tamil Eelam Karate Federation (Magal Eelapriya) 1st
karate&Kumitha 42-46kg
10. India Viruthunagar Districk Karate to Association -29-02-2004 1st Black
Belt Boys&Girls
11. Kumite 1st colour Belt boys&Girls 29-02-2003
12. Kata 3rd place colour Belt 11-13 Girls
13. Karate Champion Ship-2002 1st colour Belt Individual Kata 13-15 Girls 06-
10-2002
14. Champion Ship Contentens 22-12-1996
15. Karate Champion Ship-1995 Soohevn Region International 3rd colour Kata
16. Kata &Shiai –Kumite 1st place
17. Tamil Naadu Maduri Savagar Siruvar Manram Hand Work Training 25-12-
1999 to 03-01-2000
18. Open Event For Girls Shiai 1st individual 14-02-1999
19. Colour Belt in Shiai-Kumite (20kg ) 1st place 08-08-1998
20. School Event thirukkural -01-02-1999
21. Madurai Contosant 30-12-1995
22. Madurai Team Event Kata 2nd 1995
23. Tamil Naadu Folk Dance Event 23-08-2003
24. Beautician Course &public Speaking 14-04-2003to 28-04-2003
25. Sri lanka Japan Karate to Hayashi Ha Shitory Kai 3rd Participated -1-9-2005
26. Sri Lanka Province Leval-2012
27. 1St Kata -07-06-2012
28. 1st Kumite-07-06-2012
29. 1st Kata 28-05-2011
30. 1st Kumite 28-05-2011
31. Cricket 2nd 2007
32. Sings Competitions 2nd place -2007
Divisional Leval
1. Karati 1st place 18-05-2011
2. Kabaddi 1st Women 04-06-2011
3. Kumite 1st Women 18-05-2011
4. Cricket 1st Mannar town -2008
5. Put Shot 1st place School 2008
6. Discuss 1st place School 2008
7. Elle Women 2nd -18-02-2006
8. Kumite 1st 19-04-2006
9. 100m 2nd School -2006
10. Foot Ball Women 2nd 13-03-2005
11. Elle –Women 1st 27-02-2005
12. Cricket –Women 1st 2005
13. Kumite- 1st 2005
14. 100m Ranning 3rd place 29-03-2005
15. Art Compitison 3rd place 2005
Districk Leval
Put Shot 1st place 2008
Karate 1st 28-07-2004
North Provinces Leval
1. Kumite Black Belt 1st place Jaffna 17-10-2010
2. Cricket Team 2nd -20-09-2009 Jaffna
3. Kabaddi Team 2nd 20-09-2009
4. School Leval Long Jump 2nd -2008
5. Kata 1st place 14-07-2005
6. Kumite 1st place 14-07-2005
7. Kumite 1st place 05-08-2004
8. Kata 1st place 05-08-2004
InterNational Level
Kumite 3rd place 31-10-2005
Kata 2nd Place 31-10-2005
Spaical Awared
Maanpuru makalir thinam -08-03-2010
Education leval
1. Completd CELV Course
2. Computer &Hardware Course
3. National Certificate Information Communication &Technology
4. Speed Reading &Writing &Grammer B Pass 30-11-2010
5. Art Competition (USAID) (Red Cross) -2007
6. JRS English Cours 08-09-2009
மன்னார் மக்களின் மனம் கவர்ந்த இணையமான நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து?
மன்னாரில் உள்ள கலைஞர்களை வீரர்களை வெளிக்கொண்டுவர இப்படியான இணையம் இருப்பது எம்மைப்போன்றவர்களுக்கு பெரும் சந்தோசமான விடையமே எப்படியென்றால் புதையலை வெளியுலகிற்கு காட்டும் பொக்கிஷமான செயலாகும் திறமையிருந்தும் வெளிப்படாமல் இருக்கும் ஒவ்வொருவரையும் வெளிக்கொணர்ந்து அவர்களின் பெறுமதியினை உணரச்செய்வது உண்மையிலேயே பாராட்டுக்குரியதும் வாழ்த்துக்குரியதும் ஆகும் மன்னார் கலைஞர்கள் வீரர்களின் திறமை மகத்துவம் யாவரும் அறிந்து கொள்ள அற்புதமான ஊடகமாக நியூ மன்னார் இணையம் உள்ளது
எமக்கெல்லாம் நல்லது...
மன்னார் இணையத்திற்காக
வை.கஜேந்திரன்
விம்பம் பகுதியில் மன்னார் மண்ணின் பெருமை மகத்தான கராத்தே தேசிய வீராங்கனை தாழ்புபாடு மண்ணின் வீர மகள் சூசைநாயகி றெஸ்னிக்கா அவர்களின் அகத்திலிருந்து.....
Reviewed by NEWMANNAR
on
March 08, 2016
Rating:
No comments:
Post a Comment