மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் இலங்கை பெந்த கோஸ்து சபையின் பாஸ்டர் பலி-மேலும் 8 பேர் காயம்.Photos
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த இலங்கை பெந்த கோஸ்து சபைக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் உள்ள விமானப்படை தள பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் விபத்திற்குள்ளாகியதில் குறித்த வாகனத்தில் பயணித்த இலங்கை பெந்தகோஸ்து சபையின் பாஸ்டர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் இலங்கை பெந்த கோஸ்து சபையின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பாஸ்டர் தாவீது ராஜா(வயது-58) என்பவரே குறித்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
இலங்கை பெந்த கோஸ்து சபையின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பாஸ்டர் தாவீது ராஜா தலைமையில் இரண்டு அருட்சகோதரர்கள் மற்றும் ஆறு அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 9 பேர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற நிலையில் இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி இலங்கை பெந்த கோஸ்து சபைக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் உள்ள விமானப்படை தள பிரதேசத்தில் வைத்து குறித்த ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பிரண்டு வீதியை விட்டு தூக்கி வீசப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது இலங்கை பெந்த கோஸ்து சபையின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பாஸ்டர் தாவீது ராஜா(வயது-58) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த அருட்சகோதரர் ஒருவர் மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
ஏனையவர்கள் வைத்தியசாலைக்கு வரவில்லை.குறித்த விபத்து குறித்து மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-மன்னார் நிருபர்-
(10-04-2016)
குறித்த விபத்தில் இலங்கை பெந்த கோஸ்து சபையின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பாஸ்டர் தாவீது ராஜா(வயது-58) என்பவரே குறித்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
இலங்கை பெந்த கோஸ்து சபையின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பாஸ்டர் தாவீது ராஜா தலைமையில் இரண்டு அருட்சகோதரர்கள் மற்றும் ஆறு அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 9 பேர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற நிலையில் இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி இலங்கை பெந்த கோஸ்து சபைக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் உள்ள விமானப்படை தள பிரதேசத்தில் வைத்து குறித்த ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பிரண்டு வீதியை விட்டு தூக்கி வீசப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது இலங்கை பெந்த கோஸ்து சபையின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பாஸ்டர் தாவீது ராஜா(வயது-58) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த அருட்சகோதரர் ஒருவர் மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
ஏனையவர்கள் வைத்தியசாலைக்கு வரவில்லை.குறித்த விபத்து குறித்து மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-மன்னார் நிருபர்-
(10-04-2016)
மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் இலங்கை பெந்த கோஸ்து சபையின் பாஸ்டர் பலி-மேலும் 8 பேர் காயம்.Photos
Reviewed by NEWMANNAR
on
April 18, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 18, 2016
Rating:








No comments:
Post a Comment