வடக்கு முதலமைச்சருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!
பொதுபலசேனா மற்றும் சிஹல ராவய ஆகிய அமைப்புக்கள், நேற்று பொலிஸ் தலைமையகத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாட்டை செய்துள்ளன
அண்மைக்காலமாக சி.வி விக்னேஸ்வரன், விடுத்துவரும் அறிக்கைகள் அரசியல் அமைப்பை மீறுவதாக அமைந்துள்ளன
எனவே அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
சிஹல ராவயவின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் பொதுபலசேனாவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திலந்த வித்தானகே ஆகியோர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு முதலமைச்சருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!
Reviewed by Author
on
April 23, 2016
Rating:

No comments:
Post a Comment