அண்மைய செய்திகள்

recent
-

மின்சாரப்பிரச்சினைக்கு மக்கள் முறைப்பாட்டை கேட்க மன்னாரிலே கிளை வேண்டும்……மக்கள் வேண்டுகோள்.



மன்னார்  மாவட்டத்தில் மின்சார சபை இருக்கின்றபோதும் அது மன்னார் மக்களுக்கு திறம்படச்சேவையாற்றுகின்றதா….???  என்ற கேள்வி எழுகின்றது. ஏன் என்றால் மன்னார் மாவட்டத்தில் ஏற்படுகின்ற மின்சாரப்பிரச்சினைகள் மின்கசிவு மின்சாரம் இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்காக 0232222150 தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினால் மின்சார சபையில் இருந்து எமக்கு உடனே சொல்லும் பதில் இதுதான் இந்த 021-2024444 தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி உங்களது பிரச்சினையை சொல்லுங்கள் என்கிறார்கள்.

அந்த இலக்கமானது யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற மின்சார சபைக்குரிய தொலைபேசி இலக்கம் சரி அழைப்பினை ஏற்படுத்தும் போது அழைப்பினை எடுப்பவர் கொஞ்சம் தாமதியுங்கள் என்றும் அழைப்பிலே காத்திருங்கள் என்கின்றார் எப்படியும் குறைந்தது 5-10 நிமிடங்களுக்கு மேலாகின்றது.
அவ்வாறு அழைப்பினை எடுத்தவர் எங்களிடம் பெயர் விலாசம் கடைசியாக கட்டிய மின்சாரப்பட்டியல் இலக்கம் என்பனவற்றைக்கேட்டு விட்டு சரி உங்கள் முறைப்பாடு பதியப்படுகின்றது. சிறிது நேரத்தில் எமது மின்சார உத்தியோகத்தர்கள் வருவார்கள் என சொல்லி அழைப்பினை துண்டிக்கின்றார்..
சிறிது நேரம் கழித்து எமது மன்னார் மின்னசார சபையில் இருந்து மீண்டு;ம் அழைப்பினை ஏற்படுத்தி தகவலை உறுதிப்படுத்திக்கொள்கின்றார்கள் பலசமயங்களில் பல மணிநேரம் கழித்துதான் வருகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளால் பாரிய மின்கசிவோ மின்கம்பங்கள் முறிந்து விழுந்தாலோ (பல மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் தான் உள்ளது) மேற்கூறிய நடைமுறையினைப்பின்பற்றி செயற்பட்டால் பாரிய விளைவுகளின் பின்  தான் மின்சார சபை சம்பவ இடத்திற்குவரும் அப்போது பல உயிரோ பொருள்சேதமோ அசம்பாவிதங்களோ நிகழ்ந்து போய் இருக்கும்.
இதனால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள்.
மன்னாரில் எமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைக்கு மன்னார் மின்சாரசபைக்கும் யாழ்ப்பாண மின்சார சபைக்கும் மாறி மாறி அழைப்பினை ஏற்படுத்த அந்த தருணத்தில் தொலைபேசியில் பணம் இல்லாதவிடத்து நிலைமையை சற்று சிந்திக்க வேண்டும்.

எவ்வளவு நவீனம் வந்த பின்பும் இவ்வாறு இருப்பது வளர்ச்சி தானா ஒரு அழைப்பில் உடனே பிரச்சினை;ககு தீர்வு காண வேண்டும் அதுதான் தற்போதைய சூழலில் வளர்ச்சியாகும்.
மன்னாரில் உள்ள மின்பாவனையாளர்களின் பிரச்சினைகளை முறைப்பாடுகளை இடையூறுகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க மன்னாரில் உள்ள மின்சார சபையில் கிளையினை நிறுவி உடனடித்தீர்வை தரவேண்டும் என்பது எமது மக்களின் வேண்டுகோளாகும்.

மன்னார் மின்சார சபையானது கீழ்வரும் விடையங்களிலும்
    மின்மானி ( நீண்டகாலமாக பாவனையில் உள்ளது)
    மின்சாரக்கம்பம்(உக்கிய நிலையில் உள்ளவை)
    மின்சாரப்பட்டியல் (கொடுப்பனவுகள் கழிபடுவதும் இல்லை மீற்றர் வாசிப்பு அதிக தொகை)
    குறிப்பாக மாணவர்கள் பரிட்சைக் காலங்களில் மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மின்னினைப்புகள்(பிரதான வீதிகளிலும் உள்ளகவீதிகளிலும் பதிவாக தொங்குகின்றது) போன்றவற்றிலும் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்பது எமது மக்களின் வேண்டுகோளாகும்.
மின்சாரம் இருந்தல் இரவுக்கு வெளிச்சம்......
எங்கள் வேண்டுகோள் நிறைவேறினால் மன்னாருக்கு சீராண வெளிச்சம் தான்
-மன்னார்விழி-




மின்சாரப்பிரச்சினைக்கு மக்கள் முறைப்பாட்டை கேட்க மன்னாரிலே கிளை வேண்டும்……மக்கள் வேண்டுகோள். Reviewed by Author on April 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.