அண்மைய செய்திகள்

recent
-

சோமாலியாவில் தீவிரவாத குழுவுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் ...


சோமா­லி­யாவில் அல் – ஷபாப் தீவி­ர­வா­தி­க­ளுக்கு சக ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஐவரைக் கொல்­வ­தற்கு உத­விய ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருக்கு திங்­கட்­கி­ழமை துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்டுள்ளது.

முன்னர் கௌர­வ­மிக்க ஊட­க­வி­ய­லா­ள­ராக விளங்­கிய ஹஸன் ஹனா­பிக்கு கடந்த மாதம் தலை­நகர் மொகா­டி­ஸு­வி­லுள்ள இரா­ணுவ நீதி­மன்­ற­மொன்று மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.

அவர் 2007 ஆம் ஆண்­டுக்கும் 2011 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் அந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களை படு­கொலை செய்­வ­தற்கு தீவி­ர­வாத குழு­விற்கு உத­வி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

அன்டாலஸ் வானொ­லியில் கட­மை­யாற்­றிய பின்னர் அவர், மேற்­படி தீவி­ர­வாத குழுவில் இணைந்து கொண் ­ட­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

2007 ஆம் ஆண்டிலிருந்து சோமாலியாவில் 25 க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.




சோமாலியாவில் தீவிரவாத குழுவுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் ... Reviewed by Author on April 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.