அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு - கள்ளப்பாட்டு பகுதியில் பதற்றம்!


முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டு பகுதியிலிருந்து, முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடிக்கச்சென்ற படகு ஒன்று இதுவரை திரும்பி வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் அப்பகுதியில் பதட்ட நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று புதன்கிழமை தொழிலுக்காக இருவருடன் சென்ற படகு, இதுவரை கரை திரும்பவில்லை எனவும் இவர்களை தேடுவதற்காக நான்கு படகுகளில் பொதுமக்கள் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை எனவும் இதனால் இப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - கள்ளப்பாட்டு பகுதியில் பதற்றம்! Reviewed by NEWMANNAR on April 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.