அண்மைய செய்திகள்

  
-

மே தினமன்று போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு விடுமுறை இரத்து


இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு நேற்று 28ம் திகதி முதல் மே மாதம் 03ஆம் திகதி வரை விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

மே தினக் கொண்டாட்டங்களுக்காக வருகை தரும் மக்களின் வசதி கருதி பஸ்களை இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை இது சம்பந்தமாக அனைத்து பிரதேச காரியாலயங்களுக்கும் எழுத்து மூலமான அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தக் காலத்திற்குள் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து சாரதிகள், நடத்துனர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.
மே தினமன்று போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு விடுமுறை இரத்து Reviewed by NEWMANNAR on April 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.