மன்/ஓலைத்தொடுவாய் றோ.க.த.பாடசாலையில் தரம் 10 மற்றும் 11ம் வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக....
மன்/ஓலைத்தொடுவாய் றோ.க.த.பாடசாலையில் தரம் 10 மற்றும் 11ம் வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக.
மன்னார் கல்வி வலயத்தின் மன்னார் கல்விக் கோட்டத்தில் இயங்கும் மன்/ஓலைத்தொடுவாய் றோ.க.த.பாடசாலையில் 64 மாணவர்கள் தொகையாகவும் 08 ஆசிரியர்களுடன் அதிபர் J.J.K.றெவ்வல் அதிபராகவும் கடமையாற்றுகின்றார். 1-9 வரையான வகுப்புக்கள் உள்ள போதும் 10-11தரங்கள் இல்லாமையினாலும் தரம் உயர்த்தப்படாமையினாலும் இப்பாடசாலையில் உள்ள மாணவர்கள் ஏனைய பாடசாலைகளில் சென்று கல்வி கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை…
மன்னார்
வலயக் கல்விப் பணிப்பாளர்
கோட்டக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கு விண்ணப்பம் கையளிக்கப்பட்டுள்ளது…
தரம் 10மற்றும் 11ம் தரங்கள் ஆரம்பிப்பதற்கு கீழ்வரும் தகமைகளை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
1. இப்பாடசாலையானது போக்கு வரத்து வசதியற்ற அதிகஷ்ட பிரதேச பாடசாலையாகும்.
2. இப்பாடசாலையில் இருந்து தரம் 10 மற்றும் 11 கல்வி கற்க செல்லும் மாணவர்க்ள சுமார் 8கி.மீ இற்கு அப்பாலுள்ள பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.
3. இக் கிராமத்தில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் காட்டு வழியினூடாக பிரதான வீதிக்கு செல்வதற்கு 5கி.மீ தூரம் உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
4. இப் பாடசாலையில் தரம் 10ää 11ம் தர வகுப்புகள் இல்லாமையினால் மாணவர்கள் குறித்த பாடசாலையில் இருந்து வேறு பாடசாலைக்கு செல்லும் தருவாயில் இடைவிலகல் அதிகரிக்கிறது.
5. இங்கு வாழும் பெற்றோர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களாக இருப்பதனால் பெருந்தொகையான பணம் செலவு செய்து அயல் பாடசாலைகளுக்கு அனுப்பமுடியாதுள்ளது.
6. பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் சமூக அமைப்புகள் தரமுயர்த்த கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பாடசாலைச்சமூகமும் பெற்றோர்கள் கலவிச்சமூகமும் எதிர்பார்த்து நிற்கின்றது.
மன்/ஓலைத்தொடுவாய் றோ.க.த.பாடசாலையில் தரம் 10 மற்றும் 11ம் வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பாக....
Reviewed by Author
on
May 10, 2016
Rating:

No comments:
Post a Comment