இரத்தொட்டை- குடியிருப்பின்மீது மரம் முறிந்து விழுந்ததில் 30 பேர் நிர்க்கதி
இரத்தொட்டை, பம்ரகலவத்தையில் லயின் குடியிருப்பின் மீது இன்று மாலை மரம் முறிந்து விழுந்ததில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தொத்தட்டை பிரதேச செயலாளர் ஜீ.பீ.விஜேபண்டார தெரிவித்தார்.
கடும் காற்று காரணமாக மரம் முறிந்து குடியிருப்பின் மீது விழுந்துள்ளதாக அவர் கூறினார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இடைதங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இரத்தொட்டை- குடியிருப்பின்மீது மரம் முறிந்து விழுந்ததில் 30 பேர் நிர்க்கதி
Reviewed by NEWMANNAR
on
May 19, 2016
Rating:

No comments:
Post a Comment