கிளிநொச்சியில் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட சிறுபோகம் அழிவு! விவசாயிகள் கவலையில்......
கிளிநொச்சி மாவட்டத்தில் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட சிறுபோகப் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது. கடன்பட்டு பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள்செய்வதறியாது பெருங்கவலையில் மூழ்கியுள்ளார்கள்.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தமையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் வாழ்விடங்களுக்குள்ளும் பயிர்ச்செய்கை நிலங்களுக்குள்ளும் வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் செய்கைபண்ணப்பட்டு வெள்ளப்பெருக்கினால் அழிவடைந்துள்ள நெற்பயிர்ச்செய்கை, சிறுதானியப் பயிர்ச்செய்கை என்பவற்றின் விபரம் மாவட்டச்செயலகத்தின் புள்ளிவிபரங்களின்படி அக்கராயன் பகுதியில் 2790 ஏக்கர் சிறுபோகநெற்செய்கையில் 2500 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது.
வன்னேரிக்குளம்பகுதியில் 121 ஏக்கர் சிறுபோக நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளது.இதேவேளை இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 1500 ஏக்கர் சிறுதானியப்பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாகத் விபரங்கள் தெரிவிக்கின்றன.
இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றமையால் இம்முறைஇரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதும்கிளிநொச்சியின் ஏனைய குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கையே இடம்பெற்றிருந்ததுஎன்பதும் அதுகும் தற்போது பெய்த கனமழை வெள்ளப் பெருக்கால் அழிவடைந்துள்ளதுஎன்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கிளிநொச்சியில் பெய்த பெருமழையினால் குளங்களில் நீர் தேங்கியுள்ளமையைப்பயன்படுத்தி வெள்ளப்பெருக்கினால் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள வயல் நிலங்களில்துரிதமாக மீள்விதைப்பை மேற்கொள்வது பற்றிய முயற்சிகளில் விவசாயிகள்ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இலங்கையில் அசாதாரண காலநிலை தொடர்ந்தும்காணப்படுகின்றமையால் கடன்பட்டு பெருமளவு பணத்தைச் செலவுசெய்து மீண்டும்விதைத்துப் பயிரழிவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடனும் கவலையுடனும்விவசாயிகள் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றார்கள்.
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள்மீள்குடியேற்ற ஆரம்ப காலங்களில் வங்கிளிடமிருந்து கடனாகப் பெற்ற பணத்தைப்பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தபோது அப்போது ஏற்பட்ட கனமழைவெள்ளப்பெருக்கினால் வயல் நிலங்கள் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில்வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களைத் தற்போதுவரை திருப்பிச் செலுத்தமுடியாதுஅவலப்பட்டு நிற்கும் விவசாயிகள் தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விவசாயிகளால் வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுபயிர்ச்செய்கையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளது விவசாயக் கடன்களைஇரத்துச் செய்வதாகவும் மானியமாக்குவதாகவும் கூறியபோதிலும் அப்படியானசெயற்பாடுகள் எவையும் இடம்பெறாதமையால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டகிளிநொச்சி விவசாயிகள் வங்கிக்கடன் சுமையுடன் மென்மேலும் இயற்கையின்சீற்றத்தினால் பயிரழிவுகளை எதிர்நோக்கிப் பாதிக்கப்பட்டுக்கலங்கி நிற்கின்றார்கள்.
கிளிநொச்சியில் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட சிறுபோகம் அழிவு! விவசாயிகள் கவலையில்......
Reviewed by Author
on
May 20, 2016
Rating:

No comments:
Post a Comment