அண்மைய செய்திகள்

recent
-

மூடிய நிலையில் உள்ள கணனி கற்கைவள நிலையம் திறக்கப்பட வேண்டும்-மாணவர்கள் கல்விச்சமூகம் வேண்டுகோள்….!!!!!!!



மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகள் தற்போது தொடர்கின்றது மகிழ்ச்சியான விடையமே ஆனாலும் சில செயற்பாடுகள் கவலையளிப்பதாகவே உள்ளது காரணம் இருக்கும் வளங்களை பயன்படுத்தாமல் அவற்றினை கண்டுகொள்ளாமல் அழியும் நிலையில் விட்டுவிடுவதா…????.ஆரோக்கியமான செயலாகுமா….????

மன்னார் மண்ணில் இருக்கின்ற மாணவர்களின் ஆசிரியர்களின் அதிபர்களின் கல்வித்தரத்தினையும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஆக்கத்திறன் வளர்ச்சியினை முன்னேற்றவென மன்னார் வலையக்கல்விப்பணிமணையின் நேரடிக்கண்காணிப்பில் இயங்கி வருகின்ற…
தலைமன்னார் வீதியில் இளைஞர்சேவைகள் மன்றத்திற்கு முன்னாள் அமைந்துள்ள ஆங்கில வளநிலையமும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பின் புறமாகவுள்ள கொம்பியூட்டர் வீதியில் அமைந்துள்ள துறைசார் கணனிப்பயிற்சி நிலையம் மன்னார் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் வரப்பிரசாதமாக இருந்தது யாவரும் அறிந்த உண்மை…
ஆங்கில வளநிலையம் இயங்கி வருகின்ற போதும் தற்போது துறைசார் கணனிப்பயிற்சி நிலையம் மூடிய நிலையில் கழுதைகளின் மாடுகளின் படுக்கையிடமாக மாறியுள்ளது கவலையான விடையமே….

முன்னாள் கல்விப்பணிப்பாளர் திரு.ஆபேல் றெவல் அவர்களின் முயற்சியினால் கிடைக்கப்பெற்ற இவ்நிலையமானது திட்டமிடல் பணிப்பாளர் நாதன் பீரிஸ் அவர்களின் மேற்பார்வையில் அன்று இயங்கி வந்தது. தற்போது கடமைபுரியும் தலைமன்னார்றோ.க.த பாடசாலை அதிபர் திரு.சிவானந்தன் அவர்களாலும் மடு திட்டமிடல் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு.அமல்ராஐ; அவர்களும் வளவளாளர்களாக இருந்து 100இற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் கணனிக்கற்கை நெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு பெறுமதியான சாண்றிதழ்கள் வழங்கி கணனிஅறிவினை வளர்ப்பதில் முனைப்போடு செயற்பட்டார்கள்.

தற்போது மூடிய நிலையில் உள்ள கணனி கற்கைவள நிலையம் சில அதிகாரிகளின் அசமந்தப்போக்கும் கவனயீனத்தினாலும் தான் என்பதுதான் உண்மை எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மீண்டும் இவ் கணனி கற்கை வள நிலையம் திறக்கப்பட்டு மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கற்றல் கற்பித்தல் கணனி அறிவை மேம்படுத்தும் விதமாக திறமையான ஆளுமையுடைய பொறுப்பான அதிகாரிகளை நியமித்து மன்னார் மண்ணின் கல்விவளர்ச்சியில் சிறப்பான சேவையினை ஆற்ற முன்வரவேண்டும் என்பது கல்விச்சமூகத்தினதும் மக்களினதும் வேண்டுகோளாகும்.

தற்போதைய மாணவர்களின் ஆங்கிலம் மற்றும் கணனிக்கல்வி மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும் மன்னார் மாவட்டம் மற்ற மாவட்டங்களோடு போட்டி போட சிறந்த மாவட்டமாக மிளிர இருக்கும் வளங்களை நல்ல முறையில் பயன்படுத்த சம்மந்தப்பட்;ட அதிகாரிகள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண அமைச்சர்கள் வடமாகாண உறுப்பினர்கள் உங்கள் கவனத்திற்குத்தான்  ஊக்கமளிக்கவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

குற்றம் காண்பது எமது நோக்கமல்ல குறைகளை சுட்டிக்காட்ட விளைகிறோம் நிறைகளாக மாறும் போது மன்னார் மாவட்டம் சிறந்த மாவட்டமாக மிளிரும் என்பதில் ஐயமில்லை….

-மன்னார் புயல்- 









மூடிய நிலையில் உள்ள கணனி கற்கைவள நிலையம் திறக்கப்பட வேண்டும்-மாணவர்கள் கல்விச்சமூகம் வேண்டுகோள்….!!!!!!! Reviewed by Author on May 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.