அண்மைய செய்திகள்

recent
-

மருந்து என்ற பெயரில் போதை மருந்து இறக்குமதி....


மருந்து என்ற பெயரில் நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியிடமும் முறையிட்டுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த போதை மருந்தில் நிகோடின் அடங்கியுள்ளதுடன், இந்தியாவில் இருந்தே இது கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த போதை மருந்தானது நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முதலும் இவ்வாறானதொரு சம்பவம் பற்றி ஜனாதிபதியிடம் அறிவித்த போது இந்த மருந்தினை இறக்குமதி செய்ய ஜனாதிபதி தடை விதித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நிக்கோடின் அடங்கிய மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு வர்த்தமானி மூலம் அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், குறிப்பாக இந்த மருந்து வகையானது பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே இறக்குமதி செய்யப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்து என்ற பெயரில் போதை மருந்து இறக்குமதி.... Reviewed by Author on May 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.