மைத்திரி அரசினாலும் தமிழர்கள் அவலத்தில் அந்தரிப்பு!
வடபகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வதற்கு வீடுகள் இன்றி அவலப்பட்டு அந்தரிக்கும்போது அந்த மக்களுக்கு வீடமைப்பதற்காகவென வெளிநாட்டுஅரசாங்கங்கள் வழங்கிய வீட்டுத்திட்ட உதவியை வழங்காமல் அந்த நிதியை முடக்கிவைத்து கொள்ளை இலாபம் பெறும் நோக்குடன் நயவஞ்சகமாகச் செயற்பட்டு வருகின்றது மைத்திரி தலைமையிலான நல்லாட்சிக்கான அரசாங்கம்.
இவ்விடயம் தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெருமளவான மக்கள் வாழ்வதற்கு வீடுகள் இன்றிய நிலையில் கடந்த 6 வருட காலமாக மீள்குடியேற்ற ஆரம்ப காலத்தில் தற்காலிகமாகக் குடியிருக்கவென வழங்கப்பட்ட தகரம், தறப்பாள் கொண்டு அமைக்கப்பட்ட பழுதடைந்த கொட்டகைகளில் அவலப்பட்டு அந்தரித்து நிற்க மைத்திரி தலைமையிலான நல்லாட்டசிஅரசாங்கத்தின் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்ட உதவியை வழங்காமல் இழுத்தடித்து காலங்கடத்தி வருவதுடன் மக்கள் தமக்கு ஏற்றனவல்ல எனக்கூறும் மக்களால் விரும்பப்படாத மக்களுக்குப் பொருத்தமற்ற பொருத்து வீடுகளை மக்கள் மீது திணிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
பொருத்து வீடுகள் வடபகுதி மக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமற்றவை என மக்கள்கூறிவரும் நிலையில் தாம் வழங்கும் பொருத்து வீடுகளைத்தான் வடபகுதித் தமிழர்கள்ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று விடாப்பிடியாகக் கூறிவருகின்றார் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் வீடமைக்கவென வழங்கிய நிதியை மக்களுக்கு வீடமைக்க வழங்காமல் தாம் விரும்பிய பொருத்து வீடுகளைத்தான் மக்களுக்கு வழங்குவோம் நாம் வழங்கும் பொருத்து வீடுகளைத்தான் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என விடாப்பிடியாக மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் கூறி வருவதுடன் இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிக் கவலைப்படாது தனது குறிக்கோளில் விடாப்பிடியாக இருந்து அடம்பிடிப்பதானது மக்கள்மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைக்கவென வந்த நிதியிலிருந்து மோசடியானமுறையில் கொள்ளையடிப்பதற்கு நல்லாட்சிக்கான அரசாங்கமும் முயற்சிப்பதாக பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வடபகுதித் தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களுக்கானவீட்டுத்திட்டத்தை விரைவாக வழங்குமாறும் பொருத்து வீடுகளை விடுத்துமக்களுக்குப் பொருத்தமான கல்வீடுகளை வழங்குமாறு கூறி வரும் நிலையில் அவர்களின்கருத்துக்களை உதாசீனம் செய்யும் மைத்திரி அரசாங்கத்தின் மீள்குடியேற்றத்துறைஅமைச்சர் டி.எம்.சுவாமிநான் தான் நினைத்தபடி வழங்கவுள்ள பொருத்து வீடுகள்தான் மக்களுக்கு ஏற்றவை அவற்றைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என விடாப்பிடியாகக் கூறி அடம்பிடித்து வருகின்றார் அமைச்சர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு எப்பவோ வழங்கப்பட்டிருக்க வேண்டிய வீட்டுத்திட்டத்தை இப்போதுவரை நல்லாட்சிக்கான அரசாங்கம் வழங்காமல் இழுத்தடித்துக் காலங்கடத்தி வருகின்றது.
இந்நிலையில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் பழுதடைந்த தறப்பாள், தகரக் கொட்டகைகளில் அவலப்பட்டு அந்தரிக்கிறார்கள். தற்போது வடபகுதியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள்அவலப்பட்டு அந்தரிக்கின்றார்கள்.
இந்நிலையில் மழை பெய்யுமாகவிருந்தால் இந்த மக்களின் பழுதடைந்த தறப்பாள் கொட்டகை வாழ்க்கை சீரழிந்த வாழ்க்கைதான்.
உயரம் குறைந்த பழுதடைந்த தறப்பாள், தகரக் கொட்டகைகளில் அவலப்பட்டுஅந்தரிக்கும் இந்த மக்களின் நிலை குளிரூட்டப்பட்ட ஏ.சி மாட மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு ஏ.சி வாகனங்களில் வலம்வரும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர்டி.எம்.சுவாமிநாதனுக்கு எங்கே தெரியப்போகின்றது தமது அவல நிலை எனபாதிக்கப்பட்ட மக்களால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரி அரசினாலும் தமிழர்கள் அவலத்தில் அந்தரிப்பு!
Reviewed by Author
on
May 10, 2016
Rating:

No comments:
Post a Comment