அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த முதல் இந்திய வீரர் மரணம்....
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த முதல் இந்திய வீரர் தீபக் சோதான் மரணமடைந்தார். அவருக்கு வயது 87.
இந்தியாவில் வாழ்ந்து வரும் மூத்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் பெற்றிருந்த அவருக்கு நுரையீரல் புற்று இருந்தது கடந்த பிப்ரவரியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் குடும்பத்தினருடன் வசித்த வந்த அவர், திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
கடந்த 1952-ல் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான தீபக், தனது முதல் போட்டியிலேயே 110 ரன்கள் குவித்து சாதனை படைத்தவர்.
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த முதல் இந்திய வீரர் மரணம்....
Reviewed by Author
on
May 16, 2016
Rating:

No comments:
Post a Comment