அண்மைய செய்திகள்

recent
-

பிறந்து சில மணிநேரமேயான சிசு துண்டங்களான அவலம்!!


இராகலை - ஹைபொரஸ்ட் தோட்டத்தில், பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்ட சிசு ஒன்றின் உடற்பாகங்கள் நேற்று (01) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது,

சிசு ஒன்றின் சில உடற் பாகங்களை வளர்ப்பு மிருகங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளன.

இதனை அவதானித்த அப் பிரதேசவாசிகள் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கி உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த, பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து குறித்த சிசுவின் மிகுதி உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிசுவை பிரசவித்தவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்து சில மணிநேரமேயான சிசு துண்டங்களான அவலம்!! Reviewed by Author on May 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.