அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு மன்னாரில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல்-Photos


முள்ளிவாய்க்காலில் வகை தொகையின்றி இன அழிப்பு செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்ம சாந்தி வேண்டி இன்று புதன் கிழமை (18) காலை மன்னாரில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று புதன் கிழமை காலை 11 மணியளவில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.


இதன் போது யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலர் அஞ்சலி செலுத்துதல், மற்றும் தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றது.

முதலில் இறுதி யுத்தத்தின் போது தனது குடும்ப உறவுகள் அனைவரையும் இழந்த சந்திர சேகரன் பிருந்தா என்ற சிறுமி சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து இறுதி யுத்தத்தில் தனது கணவனை இழந்த கேதீஸ்வரன் பத்மினி என்ற பெண் மலர் மாலை அணிவித்தார்.

கலந்து கொண்ட அணைவரும் தமது தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு,மலர் அஞ்சலியும் செலுத்தினர்.இதன் போது தமது உறவுகளை இழந்த உறவினர்கள் கண்ணீர் மல்ல அஞ்சலி செலுத்தினர்.

பின் சர்வமதத்தலைவர்களினால் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டது.


குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள்,யுத்தத்தில் பாதிக்கப்பட்டு,உயிர் நீத்தவர்களின் உறவினர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என நூற்றுக்கனக்கானவர்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

















முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு மன்னாரில் உணர்வு பூர்வமாக நினைவேந்தல்-Photos Reviewed by NEWMANNAR on May 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.