அண்மைய செய்திகள்

recent
-

உண்ணிகளின் தொல்லையால் மூடப்பட்ட பாடசாலை....


ஹற்றன் கல்வி வலையத்தின் கீழ் உள்ள டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் உண்ணிகளின் தொல்லையால் இன்றைய தினம் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்ணிகளை அழிப்பதற்காக குறித்த பாடசாலையானது இன்று மூடப்படுவதாக பாடசாலையின்அதிபர் எஸ். எம்.குரூஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த உண்ணிகளை ஒழிப்பதற்காக பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்களின் அறிவுரைக்கமைய பூச்சிக் கொல்லியினை தெளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பாடசாலையில் 700 மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உண்ணிகளின் தொல்லையால் மூடப்பட்ட பாடசாலை.... Reviewed by Author on May 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.