அண்மைய செய்திகள்

recent
-

பொலிசை அதிர்ச்சியில் மூழ்கடித்த சிறுவன்....


ஜேர்மனியில் மூன்று வயது சிறுவன் கார் ஓட்டிக் கொண்டிருந்ததை பார்த்த பொலிசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மேற்கு ஜேர்மனியில் உள்ள சிறிய நகரமான Gommersheim –ன் சாலையில் கார் ஒன்று எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சென்று கொண்டிருந்தது.

இதனை கவனித்த பொதுமக்கள் அருகிலிருந்த பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த பொலிசார் காரை நிறுத்தி பரிசோதனை செய்து பார்த்த போது, மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் ஜாலியாக காரை ஓட்டி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

உடனடியாக சிறுவனிடம் தகவல்களை பெற்றுக் கொண்ட பொலிசார், அவனது வீட்டிற்கு சென்று தாயாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதுவரையிலும் தன் மகன் தொலைந்து போனது கூட தெரியாமல் இருந்த தாய், பொலிசுடன் மகனை பார்த்தவுடனே ஷாக் ஆகியுள்ளார்.

இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்ற போதிலும், கவனமாக இருக்கும்படி பொலிசார் எச்சரித்துள்ளனர்.

பொலிசை அதிர்ச்சியில் மூழ்கடித்த சிறுவன்.... Reviewed by Author on May 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.