அண்மைய செய்திகள்

recent
-

அதிசொகுசு பஸ் தடம்புரண்டு விபத்து; ஐவர் படுகாயம்...


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பயணிகள் பேருந்து ஒன்று நேற்று அதிகாலை புத்தளம் டிப்போ சந்திப் பகுதியில் வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினால் பேருந்தில் பயணித்தவர்களில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேருந்த மீது கல்வீச்சு
பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச 751 வழித்தட பஸ் வண்டி ஒன்று நேற்று புதன்கிழமை அதிகாலை 5மணியளவில் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்தார்.

பருத்தித்துறையில் இருந்து 4.30 மணிக்கு புறப்பட்ட பஸ் வண்டி அச்சுவேலி தம்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பஸ் முன் பக்க கண்ணாடி மீது கற்களை வீசித் தாக்கியதாகவும் இதனால் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் சாரதிக்கோ பயணிகளுக்கோ எவ் வித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த அவர் இது தொடர்பில் அச்சுவேலி  பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
                               
அதிசொகுசு பஸ் தடம்புரண்டு விபத்து; ஐவர் படுகாயம்... Reviewed by Author on May 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.