அண்மைய செய்திகள்

recent
-

குஜராத்தில் 2,000 கர்ப்பிணி பெண்கள் யோகா செய்து உலக சாதனை....


சர்வதேச யோகா தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2-வது ஆண்டாக கொண்டாடப்படும் யோகா தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் முழுவதும் சுமார் 40,000 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 1.25 கோடி மக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,000 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்து உலக சாதனை படைத்தனர். மேலும் 8,000 குழந்தைகள் மனித சங்கிலி அமைத்தும் உலக சாதனை படைத்துள்ளனர்.

அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில முதலமைச்சர் அனந்திபென் படேல் கலந்து கொண்டு 40 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்தார். மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு யோகா பயற்சி செய்தனர்.

குஜராத்தில் 2,000 கர்ப்பிணி பெண்கள் யோகா செய்து உலக சாதனை.... Reviewed by Author on June 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.