மொபைல் பயன்படுத்த ஒபாவுக்கு தடை....
உலகின் மிக முக்கிய பலம் வாய்ந்த வல்லரசு நாடான அமெரிக்க ஜனாதிபதிக்கு எப்போதும் பல அடுக்கு பாதுகாப்பு இருக்கும்.
அவரது காரில் கூட சிறிய ஏவுகனைகள் எல்லாம் இருக்கும். அதேபோல் இவர் பயன்படுத்தும் மொபைலுக்கும் பாதுகாப்பு அதிகமாம்.
ஒபாமா, ஜனாதிபதியாவதற்கு முன்பிருந்தே பிளாக்பெர்ரி போனை பயன்படுத்தி வருகிறார். ஒபாமா பதவிக்கு வந்த பின்னர் ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., இயங்குதளம் கொண்ட மொபைல்போன்கள் வந்துவிட்டன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு மாறத்துவங்கினர்.
இந்நிலையில், ஒபாமாவின் பிளாக்பெர்ரி போனில் பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த போனில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்ப முடியாது. பாட்டு கேட்க முடியாது. புகைப்படம் எடுக்க முடியாது. இந்த போன் மூலம் அவரது மனைவி மிச்செல், துணை ஜனாதிபதி ஜோ பிடன் உள்ளிட்ட 10 பேரிடம் மட்டும் பேச முடியும்.
ஒபாமா மற்றவர்களிடம் பேசுவதற்கு புதிய செல்போன் வழங்கப்பட்டுள்ளது. அந்த போனுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இத்தகவலை ஒபாமா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். மேலும் தனது மொபைலை விளையாட்டு பொருள் போன்று பாவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மொபைல் பயன்படுத்த ஒபாவுக்கு தடை....
Reviewed by Author
on
June 15, 2016
Rating:

No comments:
Post a Comment